போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் அடித்து கொலை: தலைமறைவாக இருந்த உரிமையாளர் சரணடைந்தார்

Spread the love


Last Updated:

Drug Rehabilitation Center :சென்னை ராயப்பேட்டையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த மறுவாழ்வுமையத்தின் உரிமையாளர் சரணடைந்துள்ளார்.

போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் அடித்து கொலைபோதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் அடித்து கொலை
போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் அடித்து கொலை
சென்னை ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர்ஸ் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 2ம் தேதி இரவு சிகிச்சைக்காக சென்ற ராஜி(46)  என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை அண்ணாசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த மறுவாழ்வு மையத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி, ராஜியை  அந்த மையத்தின் உரிமையாளர் கார்த்திக்கேயன் உத்தரவின் பேரில் ஊழியர்கள் ஏழு பேர் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

குறிப்பாக அந்த மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் வீடியோ கால் மூலம் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்து கொலையை அரங்கேற்றியுள்ளனர். இந்த கொலை வழக்கில் ஊழியர்கள் A2 யுவராஜ்(38), A3 செல்வமணி(39), A4 சதீஷ்(29), A5 கேசவன்(42),  A6 சரவணன்(45), A7 மோகன் (34), A8 பார்த்தசாரதி (23) ஆகிய 7 நபர்களை கைது செய்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளரான கார்த்திகேயனை தேடி வந்தனர். இந்நிலையில் போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் நேற்று மாலை கோவை நீதிமன்றத்தில்  சரண்டைந்தார்.

கார்த்திகேயன் சரணடைந்தார்

இதனையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த மைய உரிமையாளர் கார்த்திகேயனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதாக  போலீசார் தெரிவித்துள்ளனர்.



Source link


Spread the love
  • Related Posts

    “வரிகளை கணிசமாக உயர்த்துவேன்” – இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Trump threatens to substantially raise tariff on India for buying Russian oil

    Spread the love

    Spread the love      ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியா மீது வரிகளை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் “இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது…


    Spread the love

    Dharmasthala | தோண்டத் தோண்ட காத்திருந்த அதிர்ச்சி – தர்மஸ்தலாவில் கண்டெடுக்கப்பட்ட 100 எலும்புகள் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Dharmasthala | தர்மஸ்தலாவில் 6ஆவது நாளில் கண்டெடுக்கப்பட்ட 100 எலும்புகள், மண்டை ஓடு மற்றும் முதுகுத் தண்டு | 11 ஆவது இடத்தில் இருந்து 100 மீட்டரில் தோண்டத் தோண்ட கிடைத்த மனித எலும்புகள் | Breaking…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *