பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை – அமைச்சர் பொன்முடி

Spread the love


Last Updated:

TN Assembly | பெண்களுக்கென தனி கல்லூரி தொடங்குவதை விட, ஆண்கள் – பெண்கள் சேர்ந்து படிப்பதில் தவறில்லை – அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடிஅமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

வரும் கல்வியாண்டிலும் ( 2022-2023 ) பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் சட்டபேரவை உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் இடம் உள்ளது. இதில் 1,28,000 இடம் நிரம்பியுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் 71,934 இடங்கள் காலியாக இருப்பதாகவும், வரும் கல்வியாண்டிலும் ( 2022-2023 ) பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வேலைவாய்ப்புக்கு ஏற்றவகையில் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதாகவும், இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெண்களுக்கென தனி கல்லூரி தொடங்குவதை விட, ஆண்கள் – பெண்கள் சேர்ந்து படிப்பதில் தவறில்லை என்றும், சுயநிதி கல்லூரிகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும், அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களின் அனுமதியுடன் தான் செயல்பட முடியும் என்றும் அமைச்சர் பொன்முடி பேசினார்.



Source link


Spread the love
  • Related Posts

    அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமானால் ட்ரம்ப் காசா போரை நிறுத்த வேண்டும்: பிரான்ஸ் அதிபர் | Trump must stop Gaza war if he wants Nobel Peace Prize French President Macron

    Spread the love

    Spread the love      பாரிஸ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார். நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *