சென்னையில் பைக் சாகசம் – 4 பேர் கைது.. பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை என போலீஸார் எச்சரிக்கை.. | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

Bike Race in Chennai | சென்னை பெருநகர காவல் துறையினர் பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தும்,பெற்றோர்களை வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

பைக் சாகசம் பைக் சாகசம்
பைக் சாகசம்
சென்னையில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடும் நபர்களை விரைந்து  கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, சட்டம்- ஒழுங்கு காவலர்கள் மற்றும் ஆயுதப்படைக்காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் நேப்பியர் பாலம் முதல் அடையார் திரு.வி.க.பாலம் வரை, ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ECR, GST  சாலை, வண்ணாரப்பேட்டை மின்ட் மற்றும் வியாசர்பாடி, அம்பேத்கர் சாலை போன்ற முக்கிய சாலைகளில் தீவிரமாக கண்காணித்து பைக் சாகசத்தில்  ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்களிடமிருந்து  இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. கைதான மணிகண்டன் மற்றும் ஹரிஹரன் அளித்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பைக் சாகசத்தில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த  சஞ்சய், அயனாவரத்தைச் சேர்ந்த ஜான்ஜெபகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  விலையுயர்ந்த இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய  மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட சஞ்சய், ஜான்ஜெபகுமார் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.  சென்னை பெருநகர காவல் துறையினர் ஏற்கனவே தொடர்ந்து பைக் ரேஸில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி எச்சரிக்கை விடுத்தும், பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தும், மேலும் இளைஞர்கள் மற்றும் இளஞ்சிறார்களின் பெற்றோர்களையும் வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Also Read: வீட்டின் மேற்கூரை இடிந்து 8 மாத கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு – தூத்துக்குடியில் சோகம்

எனவே இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், மீறி   பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மற்றும் இளஞ்சிறார்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.



Source link


Spread the love
  • Related Posts

    ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

    Spread the love

    Spread the love      வாஷிங்​டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம்…


    Spread the love

    Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா Sollathigaram Debate | பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் வியூகம்சாத்தியமா? சவாலா? | Bihar Election Results 2025 | Sollathigaram Debate Follow US :…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *