கோடை விழாவுக்காக கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் மலர்கள் | Flowers bloom in Kodaikanal for the summer festival

Spread the love


திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடைவிழா மலர்க் கண்காட்சிக்குத் தயாராகும் வகையில் பிரையன்ட் பூங்காவில் பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சியை வரும் 24-ம் தேதி தொடங்கி நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாகப் பெய்த மழையால் கொடைக்கானல் மலைப்பகுதி ரம்மியமாக காட்சியளிக்கிறது. வெள்ளிநீர் வீழ்ச்சி, கரடிச்சோலை அருவி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, தேவதை நீர்வீழ்ச்சி, ஓராவி அருவி, அஞ்சுவீடு அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

சுற்றுலாத் தலங்களான மோயர்பாய்ன்ட், குணா குகை, பைன் மரக்காடுகள், தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நேற்று அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர். ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கோடை சீசன் தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே மலர்க் கண்காட்சிக்காக பிரையன்ட் பூங்காவில் பல்வேறு வகையான பூச்செடிகள் நடவு செய்யப்பட்டு, தோட்டக்கலைத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பனிப்பொழிவு, மழை ஆகியவற்றால் சேதமடையாமல் பூச்செடிகள் பாதுகாத்துப் பராமரிக்கப்படுகின்றன.

தற்போது பூச்செடிகள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன. பல்வேறு வகையான பூச்செடிகள், பல வண்ணங்களிலான மலர்கள், கண்காட்சிக்கு முன்பே பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ளது. ஆண்டுதோறும் ஊட்டியில் மலர்க் கண்காட்சி தொடங்கிய பிறகே கொடைக்கானலில் கோடை விழா, மலர் கண்காட்சி மே மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, வரும் 24-ம் தேதி கோடைவிழா, மலர்க் கண்காட்சி தொடங்கி 10 நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுற்றுலாத் துறையினர், தோட்டக்கலைத் துறையினர் செய்து வருகின்றனர்.





Source link


Spread the love
  • Related Posts

    இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை இதய ஸ்டென்ட்​டுக்கு உலகளா​விய அங்​கீ​காரம் கிடைத்​துள்​ளது | New generation heart stent made in India receives global approval

    Spread the love

    Spread the love      சான்​பி​ரான்​சிஸ்கோ: இதய சிகிச்சை நிபுணர்​களின் உலகளா​விய மாநாடு அமெரிக்​கா​வின் சான்​பி​ரான்​சிஸ்​கோ​வில் நேற்று முன்​தினம் முடிவடைந்​தது. இதில் டெல்லி பத்ரா மருத்​து​வ​மனை டீனும், இதய சிகிச்சை நிபுணரு​மான டாக்​டர் உபேந்​திர கவுல், டுக்​ஸ்​டோ-2 என்ற பெயரில் இந்தி​யா​வில் மேற்​கொள்​ளப்​பட்ட…


    Spread the love

    வங்கி கணக்கு நாமினேஷன் முதல் ஓய்வூதியம் வரை… நாளை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வரும் அதிரடி மாற்றங்கள்… | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      வங்கிகளில் டெபாசிட் கணக்குகள், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர்களை (Bank Account Nominations) நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கென…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *