குமரியில் ஓய்ந்தது மழை – திற்பரப்பு அருவியில் 4 நாட்களுக்கு பின்பு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி | Bathing allowed at Thirparappu Falls after 4 days as rains stop in Kanyakumari

Spread the love


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நின்ற நிலையில் திற்பரப்பு அருவியில் 4 நாட்களுக்கு பின்னர் இன்று (ஜூன் 20) சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக பெய்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை நீர்மட்டம் 45.13 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 629 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வரும் நிலையில் அணையில் இருந்து 750 கனஅடி தண்ணீர் மதகு வழியாகவும், 131 கனஅடி தண்ணீர் உபரியாகவும் வெளியேறி வருகிறது.

மழையுடன் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரால் புத்தன்அணை, திற்பரப்பு அருவி, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக கனமழை நின்றுள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் 4 நாட்களுக்கு பின்னர் சுற்றலா பயணிகள் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67.25 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 437 கனஅடி தண்ணீர் வருகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 8 அடியாக உள்ளது. சிற்றாறு ஒன்று அணையின் நீர்மட்டம் 11.12 அடியாக உள்ளது. அணைக்கு 39 கனஅடி தண்ணீர் வருகிறது. சிற்றாறு இரண்டு அணையின் நீர்மட்டம் 11.21 அடியாக உள்ளது. அணைக்கு 58 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது.

மழை நின்றதை தொடர்ந்து குலசேகரம், பேச்சிப்பாறை, திற்பரப்பு, கீரிப்பாறை, கரும்பாறை, களியல், திருவட்டாறு உட்பட மாவட்டத்தில் பரவலாக உள்ள ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால்வெட்டும் பணி மீண்டும் தொடங்கியது. இதைப்போல் தேங்காய் வெட்டும் தொழிலும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கட்டிட தொழில், மீன்பிடி தொழில் என அனைத்து தொழில்களும் மீண்டும் சகஜநிலைக்கு வந்துள்ளது.





Source link


Spread the love
  • Related Posts

    ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

    Spread the love

    Spread the love      வாஷிங்​டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம்…


    Spread the love

    Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா Sollathigaram Debate | பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் வியூகம்சாத்தியமா? சவாலா? | Bihar Election Results 2025 | Sollathigaram Debate Follow US :…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *