கிட்னி திருட்டு விவகாரம்; 2 தனியார் மருத்துவமனைகளுக்கு தற்காலிக தடை

Spread the love


Last Updated:

நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில், 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

ஏஐ புகைப்படம்ஏஐ புகைப்படம்
ஏஐ புகைப்படம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கிட்னி திருட்டு விவகாரத்தில் 2 தனியார் மருத்துவமனைகள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழக அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

விதிமுறைகளை மீறி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடப்பதாக வெளியான செய்திகள் குறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத்தை கடந்த 18 ஆம் தேதி நியமித்ததாக தமிழ்நாடு அரசு விளக்கம் தந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வினீத் தலைமையிலான அதிகாரிகள் குழு, புகார்கள் எழுந்த பகுதிகளில் விரிவான விசாரணை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.

இவ்விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கையினை வினீத், அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி சிதார் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில்  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின்படி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இந்த ஆணையை பிறப்பித்துள்ளதாகவும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.



Source link


Spread the love
  • Related Posts

    கம்சாத்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு பிறகு ரஷ்யா, ஜப்பான் கடற்கரையை தாக்கிய சுனாமி | Tsunami hits coasts of Russia Japan after earthquake hits

    Spread the love

    Spread the love      டோக்கியா: ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் கம்சாத்கா தீபகற்பத்தில் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் ஹொக்கைடோ தீவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *