ஒரு ரூபாயில் எங்கும் பயணிக்கலாம் – ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய சலுகை அறிமுகம் | one rupee travel introduced on the Chennai One app

Spread the love


சென்னை: ‘சென்னை ஒன்’ செயலி​யில் தலா ஒரு ரூபாய் கட்​ட​ணம் செலுத்​தி, மெட்​ரோ, மாநகர பஸ், ரயி​லில் ஒரு முறை சலுகை பயணம் செய்​யும் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில், மின்​சார ரயில், மெட்​ரோ, மாநகர பேருந்​து, ஆட்​டோ, டாக்​சிகளில் பயணிக்க வசதி​யாக ‘சென்னை ஒன்’ செயலி கடந்த செப்​.22-ம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்​தது.

இந்த செயலி​யில் அனைத்து பொது​போக்​கு​வரத்து பயணத்​துக்​கான டிக்​கெட் பெறும் வசதி இருப்​ப​தால், பயணி​களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது. இது​வரை​யில் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தினசரி பயன்​படுத்தி வரு​கின்​றனர்.

ஒரு டிக்​கெட்​டுக்கு ஒரு முறை: இந்​நிலை​யில், இந்த செயலியை ஊக்​குவிக்​கும் வகை​யில், புதிய சலுகை அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அதன்​படி, பிஎச்​ஐஎம் எனப்​படும் பீம் மற்​றும் நேவி செயலியை பயன்​படுத்தி யுபிஐ வாயி​லாக பணம் செலுத்​து​வோர், சென்னை மெட்ரோ ரயில் மற்​றும் மாநகர பேருந்​துகளின் முதல் டிக்​கெட்டை ஒரு ரூபாய் மட்​டுமே செலுத்தி முதல் பயணம் செய்ய முடி​யும்.

அதாவது, விமான நிலை​யத்​தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயி​லில் செல்​வதற்கு ரூ.40 கட்​ட​ணம். செயலி​யில் ரூ. 32-ல் டிக்​கெட் புக்​கிங் செய்​ய​லாம். ஆனால், சென்னை ஒன்று செயலியை பயன்​படுத்தி ‘பீம் மற்​றும் நேவி’ செயலிகள் வாயி​லாக டிக்​கெட் எடுத்​தால் ஒரு ரூபாய் கட்​ட​ணம் செலுத்​தி​னால் மட்​டும் போதும். இதே போல, மாநகர் பேருந்​துகளில் டிக்​கெட் எடுப்​பவர்​களுக்​கும் இது பொருந்​தும்.

மின்​சார ரயி​லில் பயணிப்​பவர்​களும் இந்த சலுகையை பயன்​படுத்த முடி​யும். ஆனால், இந்த சலுகை ஒரு டிக்​கெட்​டுக்கு ஒரு முறை மட்​டும் தான் கிடைக்​கும். இந்த சலுகை நேற்று முதல்​ நடை​முறைக்​கு வந்​துள்​ளது.





Source link


Spread the love
  • Related Posts

    Bihar Election 2025 News18 Exit Poll Result : முந்தும் என்.டி.ஏ; பின்தங்கிய மகாகத்பந்தன்! 243 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவு | இந்தியா

    Spread the love

    Spread the love      Last Updated:November 11, 2025 7:36 PM IST Bihar Election 2025 Exit Poll Result CNN News18 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 140 – 150 வரை கிடைக்க வாய்ப்பு…


    Spread the love

    அதிகாலை 3 மணிக்கு தேர் விபத்து.. 5 மணிக்கே தொடர்புகொண்ட முதல்வர்

    Spread the love

    Spread the love      பள்ளிகளில் மாணவர்கள் செயல்பாடு குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை முடிந்து உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒரிரு நாளில் இது தொடர்பாக அறிக்கை வரும். ஆசிரியர்,பெற்றோர், சமூக அமைப்பு இணைந்து தான் மாணவ செல்வங்களை திருத்த வேண்டிய கட்டாயம் உள்ளது…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *