ஊட்டி, கொடைக்கானல் போல வால்பாறைக்கு செல்ல நவ.1 முதல் இ-பாஸ் திட்டத்தை அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவு | High Court orders implementation of e-pass scheme from Nov 1 to travel to Valparai like Ooty and Kodaikanal

Spread the love


சென்னை: ஊட்​டி, கொடைக்​கானல் போல வால்​பாறைக்கு செல்​ல​வும் நவ.1-ம் தேதி முதல் இ-பாஸ் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

நீல​கிரி மாவட்​டம் ஊட்டி மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டம் கொடைக்​கானலில் சுற்​றுலாப் பயணி​களால் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசலை குறைக்​கும் வகை​யில் இந்த இரு இடங்​களி​லும் எத்​தனை சுற்​றுலா வாக​னங்​களை அனு​ம​திக்​கலாம் என்​பது குறித்து உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி சென்னை ஐஐடி மற்​றும் பெங்​களூரு ஐஐஎம் நிறு​வனங்​கள் ஆய்வு மேற்​கொண்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில் இதுதொடர்​பான வழக்​கு​கள் நீதிப​தி​கள் என்.சதீஷ்கு​மார், டி.பரத சக்​ர​வர்த்தி ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் மற்​றும் வனத்​துறை தரப்​பில் சிறப்பு அரசு வழக்​கறிஞர் டி.சீனி​வாசன் ஆகியோர் ஆஜராகி, ஐஐடி மற்​றும் ஐஐஎம் சார்​பில் இடைக்​கால அறிக்​கைகளை தாக்​கல் செய்​தனர்.

அந்த அறிக்​கை​களில் கொடைக்​கானல், ஊட்​டிக்கு செல்​லும் சுற்​றுலா வாக​னங்​களின் எண்​ணிக்​கையை வெகு​வாக குறைக்க வேண்​டும், அரசு போக்​கு​வரத்தை பயன்​படுத்த சுற்​றுலா பயணி​களை ஊக்​குவிக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு பரிந்​துரைகள் சுட்​டிக்​காட்டப்​பட்டன.

மேலும் டிசம்​பரில் இறுதி அறிக்கை தாக்​கல் செய்​யப்​படும் என்​றும் தெரிவிக்கப்​பட்​டது. அதையடுத்து இந்த ஆய்வு குழு​வினருக்கு தேவை​யான தகவல்​கள் மற்​றும் ஆலோ​சனை​களை வழங்​கும் வித​மாக தமிழக தலை​மைச் செய​லா​ளர் தலை​மை​யில் விரை​வில் ஆய்​வுக்​கூட்​டம் நடத்த வேண்​டும் என அரசுக்கு உத்​தர​விட்ட நீதிப​தி​கள், விசா​ரணையை அக்​டோபர் 31-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தனர்.

அப்​போது ஊட்​டி, கொடைக்​கானலுக்கு செல்ல இ-பாஸ் கட்​டா​யம் என்​ப​தால் சுற்​றுலா ப்பயணி​கள் தற்போது வால்​பாறை​யில் அளவுக்கு அதி​க​மாக குவிந்து வரு​வ​தாக இந்த வழக்​கில் நீதி​மன்​றத்​துக்கு உதவ நியமிக்​கப்​பட்ட வழக்​கறிஞர்​கள் குழு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி​கள், ” ஊட்​டி, கொடைக்​கானலை விட வால்​பாறை, டாப்​சிலிப், ஆனைமலை புலிகள் காப்​பகம் போன்​றவை சுற்​றுச்​சூழல் ரீதி​யாக பாது​காக்​கப்​பட்ட வனப்​பகு​தி​கள்.

எனவே வால்​பாறைக்கு செல்​ல​ வரும் நவ.1-ம் தேதி முதல் இ-பாஸ் திட்​டத்தை அமல்​படுத்தி சுற்​றுலா பயணி​களின் கூட்​டத்தை கட்​டுப்​படுத்த வேண்​டும். அதே​போல வால்​பாறை, டாப்​-ஸ்​லிப் பகு​தி​களுக்​கும் தடை செய்​யப்​பட்ட பிளாஸ்​டிக் பொருட்​களை கொண்டு செல்​லாத வகை​யில் அதி​காரி​கள் கண்​காணிப்பை தீவிரப்​படுத்த வேண்​டும் என உத்​தர​விட்டு விசா​ரணை​யை வரும்​ அக்​.31-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.





Source link


Spread the love
  • Related Posts

    அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமானால் ட்ரம்ப் காசா போரை நிறுத்த வேண்டும்: பிரான்ஸ் அதிபர் | Trump must stop Gaza war if he wants Nobel Peace Prize French President Macron

    Spread the love

    Spread the love      பாரிஸ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார். நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி…


    Spread the love

    Консультация арбитражного юриста: помощь в сложных спорах, мнения экспертов и услуги по отправке документов в суды и органы, отвечающие за банкротство Арбитражный юрист: ключ к успешному разрешению споров

    Spread the love

    Spread the love     Арбитражный юрист — это специалист, который предоставляет услуги по разрешению споров в арбитражных судах и других инстанциях Его работа особенно актуальна для компаний, которые сталкиваются с экономическими спорами,…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *