WTC போட்டிகளில் 6000 ரன்கள் குவிப்பு.. புதிய சாதனை படைத்த இங்கிலாந்தின் ஜோ ரூட்.. | Breaking and Live Updates

Spread the love


Last Updated:

தற்போது தேநீர் இடைவேளை வரையில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்துள்ளது.

ஜோ ரூட்ஜோ ரூட்
ஜோ ரூட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ் மேன் ஜோ ரூட் 6000 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜோ ருட் தற்போது இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறார். இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம்பெறும் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஜோ ரூட் 69 ஆவது மேட்ச்சில் இன்று விளையாடினார். 25 ரன்களை அவர் கடந்தபோது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்தார்.

இந்த சாதனையை ஏற்படுத்தும் முதல் வீரர் ஜோ ரூட் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்த இடங்களில் உள்ள வீரர்களில் பெரும்பாலானோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷேன் 4225 ரன்கள் எடுத்து 3 ஆவது இடத்தில் இருக்கிறார்.

மேட்ச்சைப் பொருத்தளவில் இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. தற்போது தேநீர் இடைவேளை வரையில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்துள்ளது.

[]

Source link


Spread the love
  • Related Posts

    ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் அமைகிறது படகு இல்லம் சுற்றுலா! | Boat House Setup at Rameswaram Angini Thertha Sea

    Spread the love

    Spread the love      ரூ.7.88 கோடி மதிப்பீட்டில் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் படகு இல்லம் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழ்நாடு கடல்சார் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ராமேசுவரம் ஆன்முக தலமாக மட்டுமின்றி, சிறந்த சுற்றுலா தலமாகவும் மாறி வருகிறது.…


    Spread the love

    போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட நபர் மர்ம மரணம் – அடித்தே கொன்றதாக உறவினர்கள் புகார் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:May 03, 2022 1:28 PM IST Chennai : சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட நபர் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *