Seeman | “பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன்”

Spread the love

Last Updated:

சீமான், பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என பகிரங்கமாக பேசியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் சீமான், சீதாலட்சுமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

SeemanSeeman
Seeman

பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது, தான் வெடிகுண்டு வீசுவேன் என சீமான் பகிரங்கமாக பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பெரியாருக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மீண்டும் முன்வைத்தார். அப்போது, “பெரியார் வைத்திருப்பது வெங்காயம். என் தலைவன் வைத்திருப்பது வெடிகுண்டு. பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது, தான் வெடிகுண்டு வீசுவேன். என்ன நடக்குது என்று பிறகு பாருங்கள். வெடிகுண்டு வைத்துள்ளேன். இன்னும் வீசவில்லை. வீசினால் என்ன ஆகும் என்று பாருங்கள்” என்று சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

மேலும் பேசுகையில், தமிழ் தேசியத்தை தான் பற்ற வைத்து விட்டதாகவும், அது தற்போது எரிந்து கொண்டு இருப்பதாகவும் சீமான் கூறினார். பேராபத்தான திராவிடத்திற்கு எதிரான அரசியலை, தான் முன்னெடுத்து இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் சீமான் பதில் அளித்தார்.

 

முன்னதாக திராவிடத்திற்கு எதிரான பேராபத்தான அரசியலை முன்னெடுப்பதாக அதே கூட்டத்தில் பேசிய சீமான், தனது அரசியல் குறித்து திருமாவளவனின் கருத்துக்கும் சீமான் பதில் அளித்தார்.

Also Read | OTT Spot | ரெண்டே சம்பவம்.. முதல் பாதி தரம்.. இரண்டாம் பாதி தாறுமாறு.. இந்த ஓடிடி படத்தை மிஸ் பண்ணாதீங்க!

“திமுகவால் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தேர்தலில் வென்று காட்ட முடியாது. பெரியார் குறித்து பேசி ஓட்டு வாங்கினால் அது தீட்டு” என்றும் பேசினார் சீமான்.

 

இதற்கிடையே, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஐந்தாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று பவானி சாலையில் உள்ள நெரிக்கல்மேட்டில் சீதாலட்சுமிக்கு வாக்கு கேட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேசியதாக சீமான், சீதாலட்சுமி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக சீமான் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Source link


Spread the love
  • Related Posts

    மும்மொழி கொள்கை தமிழ் மொழிக்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் பிரதான் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 14, 2026 9:56 PM IST “மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதால் தமிழ் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய கல்விக் கொள்கை என்பது தாய்மொழிகளை மாற்றுவதோ, பலவீனப்படுத்துவதோ இல்லை” என தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.…


    Spread the love

    Tamil Live Breaking News: ”நல்விடியல் பிறக்கட்டும்..” தவெக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Tamil Live Breaking News: தீபாவளியை முன்னிட்டு சென்னை-திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் – திருச்சிக்கு இன்று இரவு 9.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 8…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *