சென்னையில் குப்பையை தரம் பிரிக்கும் போது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

Spread the love


Last Updated:

Chennai District | சென்னையில் குப்பையை தரம் பிரிக்கும் போது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்புவிஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
சென்னை கொளத்தூர் கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருவெங்கடம். இவர் மாதவரம் மண்டலத்தில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் தொழிற்சாலையில்  தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருவெங்கடம் நேற்று வழக்கம்போல் குப்பையை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென மயக்கமடைந்தார்.

இதையடுத்து இவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து 108 அவசர ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்தனர். உடனடியாக அவரை அவசர ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திருவெங்கடம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனை சார்பில் புறநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாதவரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

மாதவரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருவெங்கடம் மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். குப்பை தரம் பிரிக்கும் தொழிலாளி குப்பை தரம் பிரிக்கும் போது அதிலிருந்து வெளியேறிய விஷவாயு காரணமாகவே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக உடன் பணியாற்றிய சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் : அசோக் குமார்



Source link


Spread the love
  • Related Posts

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : கலைக்கல்லூரி மாணவிகள் சைக்கிள்  பேரணி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 11:49 PM IST இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள்  போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர் சைக்கிள் பேரணி கொடைக்கானல் ஏரிச்சாலை…


    Spread the love

    கரூர் அசம்பாவிதம்; விஜய்யிடம் சிபிஐ விசாரணை: கனிமொழி எம்.பி. கொடுத்த பதில் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 1:33 PM IST கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார். News18 அதிமுக பொதுச் செயலாளர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *