8 வயது சிறுமிக்கு 6 மாதகாலமாக பாலியல் தொல்லை… சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் கைது

Spread the love


Last Updated:

போக்சோ வழக்கு பதிந்து ராஜனை கைது செய்த கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் ராஜன்கைது செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் ராஜன்
கைது செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் ராஜன்
8 வயது சிறுமிக்கு 6 மாதகாலமாக பொது கழிவறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் ஒருவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, சேத்துப்பட்டு புதிய பூபதி நகர் பகுதியில் உள்ள பொது கழிப்பறைக்குள் நேற்று மாலை 50 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் எட்டு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு சென்ற நபர்கள் இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்த நபரை அடித்து இழுத்து வந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஆலந்தூர் சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜன்(49) என்பதும், இவர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது.

மேலும், கடந்த 8 மாத காலமாக சேத்துப்பட்டு புதிய பூபதி நகர் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும், கடந்த ஆறு மாத காலமாக சிறுமிக்கு இவர் பொது கழிப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து போக்சோ வழக்கு பதிந்து ராஜனை கைது செய்த கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.



Source link


Spread the love
  • Related Posts

    Sehat Selalu, Tapi Jangan Lupa Ketawa

    Spread the love

    Spread the love     Sehat Selalu, Tapi Jangan Lupa Ketawa Intro: Hidup Sehat Itu Bukan Cuma Makan Sayur Kesehatan itu mahal, tapi lebih mahal kalau sudah masuk rumah sakit dan dapat bonus…


    Spread the love

    ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருள் வாங்காது என கேள்விப்பட்டேன்; அது நல்லது: ட்ரம்ப் | Donald Trump welcomes reports India may halt Russian oil imports, calls it a ‘good step’

    Spread the love

    Spread the love      வாஷிங்டன்: “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருட்களை வாங்காது என்று கேள்விப்பட்டேன். அது ஒரு நல்ல நடவடிக்கை” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஷ்யாவிடம் இருந்து இனி இந்தியா…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *