வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: விசிக தலைவர் திருமாவளவனுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி நன்றி

Spread the love


Last Updated:

வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்த திருமாவளவனுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

News18News18
News18

வக்பு சட்ட திருந்த மசோதாவுக்கு எதிராக சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், குரல் கொடுத்த விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் வக்பு சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இது தொடர்பாக இரண்டு அவைகளிலும் விவாதம் நடைபெற்றது.

அப்போது மக்களவையில் நடந்த விவாதத்தில் விசிக எம்.பி. திருமாவளவன் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதற்கு மனித நேய ஜனநாயக கட்சி நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹாருன் ரஷீத் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இம்மசோதாவை மக்களவையிலும்,  மாநிலங்களவையிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத் திருத்ததிற்கு எதிராக சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலுவாக களமாடி வருகின்றது.

இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஆதரவாக தொடர்ந்து போராடும் விசிக நிறுவனர் – தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் சந்தித்து சால்வை அணிவித்து, “நபிகள் நாயகம் வரலாறு” புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தேன். நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என தெரிவித்துள்ளார்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    காசாவை முழுமையாக ‘கைப்பற்ற’ இஸ்ரேல் திட்டம் – எப்படி நடக்கும் இந்த ‘ஆக்கிரமிப்பு’? | Will Israel fully reoccupy Gaza? – The support and opposition for Netanyahu

    Spread the love

    Spread the love      காசாவில் பசியில் கதறும் குழந்தைகள் மீது சர்வதேச ஊடகங்களின் கரிசனம் இருக்க, ஊடகப் பார்வையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகப் பார்வையையும் இஸ்ரேலின் பக்கம் திருப்பும் விதமாக, ஒரு வரலாற்று முடிவை நோக்கி முன்னேறி வருகிறார் அந்நாட்டுப் பிரதமர்…


    Spread the love

    பரோட்டா கடையில் QR கோடு மோசடி.. 5 ஆண்டுகளாக ஓனரை ஏமாற்றி வந்த ஊழியர் மீது வழக்கு | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:August 07, 2025 9:54 PM IST நாகர்கோயிலில் பரோட்டா கடையில் கியூ.ஆர். கோடை மாற்றி 10 லட்சம் பண மோசடி செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். QR கோடு மோசடி அரசியல்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *