3 மாதமாக வீட்டிற்கே வருவதில்லை.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று கணவனை வெளுத்து வாங்கிய மனைவி!

Spread the love


Last Updated:

குடும்பச் செலவுக்குக்கூட தனது கணவர் பணம் தராமல் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக பிந்தியா குற்றம்சாட்டியுள்ளார்.

News18News18
News18

சீரியல் சூட்டிங்கே கதி என கணவர் வீட்டுக்கே வராத நிலையில், அவரைத் தேடி ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கே சென்று அவரது மனைவி தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் பிரபல சின்னத்திரை சீரியல் நடிகர் ஐயப்பன். கயல், தென்றல், கனா காணும் காலங்கள் உள்ளிட்ட சீரியல்கள் மற்றும் ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஊட்டியைச் சேர்ந்த பிந்தியா என்ற பெண்ணை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அவ்வப்போது சண்டை ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஐயப்பன் வீட்டிற்கே வரவில்லை எனக் கூறி மனைவி பிந்தியா, வளசரவாக்கத்தில் சூட்டிங் நடைபெறும் வீட்டுக்கே சென்று, ஏன் வரவில்லை என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். நன்றாக சம்பாதிப்பதாகவும், ஆனால் தன்னையும், குழந்தையையும் அடித்து துன்புறுத்துவதாகவும், குடும்பச் செலவுக்குக்கூட தனது கணவர் பணம் தருவதில்லை பிந்தியா குற்றம்சாட்டியுள்ளார்.

Also Read: Manoj Kumar Death: பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் காலமானார்.. பாலிவுட் திரையுலகில் சோகம்!

இதனை மறுத்துள்ள நடிகர் ஐயப்பன், தன்னை வேண்டுமென்றே மனைவி அசிங்கப்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார். மேலும், தான் குடும்பம் நடத்த பணம் கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/சினிமா/

3 மாதமாக வீட்டிற்கே வருவதில்லை.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று கணவனை வெளுத்து வாங்கிய மனைவி!

[]

Source link


Spread the love
  • Related Posts

    “வாழ்நாள் முழுவதும் உன் அருகில் நான்…” – 10வது திருமண நாள்… அசினின் கணவர் நெகிழ்ச்சி! | பொழுதுபோக்கு செய்திகள்

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 8:40 PM IST மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு அசின் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் இருக்கிறார். News18…


    Spread the love

    Bigg Boss 9 Title Winner | பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் இவர் தான்.. வெளியான கணிப்பு! | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      தொடர்ந்து 6 பேர் ஃபினாலேவிற்கு தகுதி பெற்ற நிலையில் வினோத் ரூ.18 லட்சத்துடன் பெட்டியை எடுத்து வெளியேறினார். அதே போல், சாண்ட்ரா எவிக்‌ஷன் செய்யப்பட்டார். கடைசியாக சபரி, விக்கல்ஸ் விக்ரம், அரோரா, திவ்யா ஆகிய 4 பேரும்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *