கலிபோர்னியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்: மத்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் | Hindu temple defaced in California with anti-India graffiti

Spread the love


புதுடெல்லி: கலி​போர்​னி​யா​வில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் மந்​திர் மீது மர்ம நபர்​கள் நேற்று தாக்​குதல் நடத்தி உள்​ளனர்.

அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம் சினோ ஹில்ஸ் பகு​தி​யில் இந்து கோயி​லான பாப்ஸ் ஸ்ரீ சுவாமி நாராயண் மந்​திர் மீது மர்ம நபர்​கள் சிலர் நேற்​று​முன்​தினம் தாக்​குதல் நடத்​தினர். இதில் கோயில் சேதம் அடைந்​துள்​ளது. இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்சக இணை​யதளத்​தில் வெளி​யான பதி​வில் செய்​தித் தொடர்​பாளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால் கூறும்​போது, “சினோ ஹில்ஸ் பகு​தி​யில் இந்து கோயில் மீது தாக்​குதல் நடந்​தது குறித்த தகவல்​களை அறிந்​தோம். கீழ்த்​தர​மான இது​போன்ற தாக்​குதல்​களை வன்​மை​யான சொற்​களால் கண்​டிக்​கிறோம். இதில் சம்​பந்​தப்​பட்ட குற்​ற​வாளி​களை கண்​டு​பிடித்து கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று உள்​ளூர் அதி​காரி​களை வலி​யுறுத்தி உள்​ளோம். அத்​துடன் வழி​பாட்டு தலங்​களுக்கு போதிய பாது​காப்பு வழங்​கும்​படி​யும் கேட்​டுக் கொண்​டுள்​ளோம்” என்று கூறி​யுள்​ளார்.

முன்​ன​தாக தாக்​குதல் குறித்து பாப்ஸ் சுவாமி நாராயண் மந்​திர் மக்​கள் விவ​காரப் பிரிவு தனது அதி​காரப்​பூர்வ எக்ஸ் வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “மீண்​டும் ஒரு இந்து கோயில் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது. இந்த முறை சினோ ஹில்ஸ் பகு​தி​யில் உள்ள சுவாமி நாராயண் கோயில் மீது தாக்​குதல் நடந்​துள்​ளது. பிரி​வினை, கருத்து வேறு​பாடு​களை விதைக்​கும் எந்த செயலை​யும் நாங்​கள் கடுமை​யாக எதிர்ப்​போம். வெறுப்​புணர்வை தூண்​டும் எந்த செயலை​யும் வன்​மை​யாக கண்​டிக்​கிறோம். வெறுப்​புணர்வு வேரூன்ற விடமாட்​டோம். எங்​களு​டைய பொது​வான, மனித நேயம், நம்​பிக்கை போன்​றவை அமை​தி, இரக்​கத்தை உறு​திப்​படுத்​தும்” என்று தெரி​வித்​துள்​ளது.

கடந்த ஆண்டு செப்​டம்​பர் மாதம் நியூ​யார்க் நகரில் உள்ள பாப்ஸ் மந்​திர் மீது மர்ம நபர்​கள் தாக்​குதல் நடத்​தினர். அதற்கு சில நாட்​களுக்​குப் பிறகு செப்​டம்​பர் 25-ம் தேதி கலி​போர்​னி​யா​வின் சேக்​ரமென்டோ பகு​தி​யில் உள்ள சுவாமி நாராயண் மந்​திர் மீது தாக்​குதல் நடந்​தது. இந்​நிலை​யில் தற்​போது சினோ ஹில்​ஸ் பகு​தி​யில் உள்ள கோயில் மீது மர்ம நபர்​கள் தாக்​குதல்​ நடத்​தி​யிருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.





Source link


Spread the love
  • Related Posts

    ஊட்டி, கொடைக்கானலில் ஏப்.1 முதல் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு | New restrictions for tourist vehicles in Ooty and Kodaikanal from April 1

    Spread the love

    Spread the love      கோடை கால நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த கட்டுப்பாடுகளை வரும் ஏப்.1 முதல் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற…


    Spread the love

    தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல்

    Spread the love

    Spread the love      Last Updated:March 14, 2025 9:09 AM IST Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அது உயர்த்தப்படுமா, பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *