புரட்டாசி மாத சனிக்கிழமைகள் நிறைவு- களைக்கட்டிய காசிமேடு மார்க்கெட்!

Spread the love


Last Updated:

மீன்களின் விலையை பொறுத்தமட்டில் கடந்தவாரத்தை காட்டிலும் இந்த வாரம் சற்றே விலை ஏறியிருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். விலை சற்றே உயர்ந்திருந்தாலும் அசைவ விரும்பிகள்  பலரும் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர்

காசிமேடு காசிமேடு
காசிமேடு

புரட்டாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதிலும் மீன்களை வாங்க ஆர்வம் காட்டிய அசைவபிரியர்களின் கூட்டத்தால் மீன்கள்  விலை சற்றே அதிகரித்தது.

சென்னை காசிமேட்டில் நள்ளிரவு முதலே மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காசிமேட்டில் பொதுவாக நள்ளிரவு இரண்டு மணியளவிலே தொடங்கும் விற்பனையில் பெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் மீன்களை வாங்கி செல்வது வழக்கம். அசைவ விரத நாட்களடங்கிய புரட்டாசி மாதத்தில் பெரும்பாலும் பலரும் அசைவத்தை  சாப்பிடுவதை பலரும் தவிர்த்து வந்தனர்.

புரட்டாசி தொடங்கியதில் இருந்து  கடந்த சில வாரங்களாகவே காசிமேட்டில் மீன்களின் விலையானது குறைந்த விலையிலேயே காணப்பட்டு வந்தது.

இன்னும் ஒரு சில நாட்களில் புரட்டாசி முடியவிருக்கும் நிலையில் புரட்டாசியின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று மீன்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மீன்களின் விலையை பொறுத்தமட்டில் கடந்தவாரத்தை காட்டிலும் இந்த வாரம் சற்றே விலை ஏறியிருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். விலை சற்றே உயர்ந்திருந்தாலும் அசைவ விரும்பிகள்  பலரும் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர்.

மீன்களின் விலைப்பட்டியல்

வஞ்சிரம் கிலோ 850
வவ்வா 650
நாயாறல் 600
பெரிய சங்கரா 600
கடம்பா 550
இறால் 500

சராசரியாக கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் 100 முதல் 150 வரை விலை அதிகரித்துள்ளது.

செய்தியாளர் : அசோக் குமார்



Source link


Spread the love
  • Related Posts

    ஊட்டி, கொடைக்கானலில் ஏப்.1 முதல் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு | New restrictions for tourist vehicles in Ooty and Kodaikanal from April 1

    Spread the love

    Spread the love      கோடை கால நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த கட்டுப்பாடுகளை வரும் ஏப்.1 முதல் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற…


    Spread the love

    தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல்

    Spread the love

    Spread the love      Last Updated:March 14, 2025 9:09 AM IST Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அது உயர்த்தப்படுமா, பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *