கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Spread the love


Last Updated:

சென்னையில் கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

News18News18
News18

சென்னையில் வீட்டில் கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தில் வீரக்குமார் – லட்சுமி தம்பதி குடும்பத்துடன் வசித்து வந்தனர். கடந்த வாரம் செவ்வாய்கிழமை வீட்டில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் தீர்ந்துவிட்டதால், புதிதாக இருந்த வேறொரு சிலிண்டரை லட்சுமி மாற்றினார். அப்போது, வால்வு சரியாக இல்லாததால் கேஸ் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கேஸ் சிலிண்டரை மாற்றிய சிறிது நேரத்தில், வீட்டில் பூஜை செய்வதற்காக லட்சுமி, தீபம் ஏற்றச் சென்றார். அதற்காக தீக்குச்சியை லட்சுமி உரசிய போது பெரும் சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. உடலில் தீப்பற்றியதால், லட்சுமியும், அவரது கணவர் வீரக்குமாரும் அலறினர்.

அவர்களை காப்பாற்ற முயன்ற மருமகன் குணசேகரனும் பலத்த தீக்காயம் அடைந்தார். பலத்த காயமடைந்த 3 பேரும் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Source link


Spread the love
  • Related Posts

    ஊட்டி, கொடைக்கானலில் ஏப்.1 முதல் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு | New restrictions for tourist vehicles in Ooty and Kodaikanal from April 1

    Spread the love

    Spread the love      கோடை கால நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த கட்டுப்பாடுகளை வரும் ஏப்.1 முதல் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற…


    Spread the love

    தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல்

    Spread the love

    Spread the love      Last Updated:March 14, 2025 9:09 AM IST Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அது உயர்த்தப்படுமா, பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *