சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிமுக என்றும் இரட்டை வேடம் போட்டதில்லை – எடப்பாடி பழனிசாமி | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

ADMK : சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிமுக என்றும் இரட்டை வேடம் போட்டதில்லை என்றும், சிறுபான்மை மக்கள் நலனுக்காக வாய் சொல்லில் மட்டும் இல்லாமல் அதனை கடைபிடிக்கும் கட்சி அதிமுக  எனவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிஎடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில், அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இஸ்லாமிய மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியது என்று கூறினார். ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க அரசின் சார்பில் அரிசி வழங்கும் திட்டம் 2001 முதல்  தொடங்கப்பட்டு தற்போது வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தன கட்டைகள் வழங்கியது என பல்வேறு நல திட்டங்களை அதிமுக அரசு வழங்கியது என்றார்.தொடர்ந்து பேசிய அவர், அதிமுக இரட்டை வேடம் போடவில்லை என்றும் சிறுபான்மை மக்கள் நலனுக்காக வாய்சொல் வீரர்களாக மட்டும் இல்லாமல் அதனை கடைப்பிடிக்கும் கட்சியாக அதிமுக உள்ளது என்றும் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிவகுத்த பாதையில் இஸ்லாமிய மக்களின் நலனுக்காக அதிமுக தொடர்ந்து செயல்படும் என்றார்.



Source link


Spread the love
  • Related Posts

    மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர்; ஆனால்… – ட்ரம்ப்பின் சூசகப் பேச்சு! | Trump says PM Modi is a great leader; but claims honour for ending India – Pak war

    Spread the love

    Spread the love      சீயோல்: “இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த மே…


    Spread the love

    HRCE | Chennai HC | இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு | Elephant | News18 Tamil Nadu | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு..நெல்லையப்பர் கோயில் யானை தொடர்பான வழக்கில் வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு | | | Download our News18 Mobile App – https://onelink.to/desc-youtubeSUBSCRIBE…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *