வாட்ஸ்அப் டிபி-யில் மனைவியின் புகைப்டத்தை வைத்த நபருக்கு வந்த பேரதிர்ச்சி | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

சென்னை அயனாவரத்தில் வாட்ஸ்ஆப் டிபியில் இருந்த மனைவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்
சென்னை அயனாவரம்  குன்னூர் நெடுஞ்சாலையில்  உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நந்தகுமார். இவர் சொந்தமாக இரு சக்கர உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் தனது வாட்ஸ்ஆப் டிபியில் தனது மனைவியின் புகைப்படத்தை வைத்திருந்தார். அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் அந்த போட்டோவை எடுத்து ஒரு நிர்வாண ஆணுடன் இருப்பது போன்று மார்பிங் செய்துள்ளார்.

மேலும், நந்தகுமார் மனைவியின் முகத்தை மாற்றி மார்பிங் செய்து பல்வேறு ஆபாச புகைப்படங்களையும் உருவாக்கியுள்ளார். சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கே வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியுள்ளார் மர்மநபர்  இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நந்தகுமார் மர்மநபருக்கு போன் செய்துள்ளார். அப்போது, ஆபாச புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் குறிப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஜிபேயில் பணம் அனுப்பும் படி கேட்டுள்ளார்.

பணம் தராமல் நம்பரை பிளாக் செய்தால் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் நந்தகுமார் மற்றும் அவரது மனைவி இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து அயனாவரம் காவல்நிலையத்தில் தம்பதி இருவரும் புகார் அளித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அயனாவரம் போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மர்மநபர் தேடி வருகின்றனர்.



Source link


Spread the love
  • Related Posts

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : கலைக்கல்லூரி மாணவிகள் சைக்கிள்  பேரணி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 11:49 PM IST இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள்  போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர் சைக்கிள் பேரணி கொடைக்கானல் ஏரிச்சாலை…


    Spread the love

    கரூர் அசம்பாவிதம்; விஜய்யிடம் சிபிஐ விசாரணை: கனிமொழி எம்.பி. கொடுத்த பதில் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 1:33 PM IST கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார். News18 அதிமுக பொதுச் செயலாளர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *