‘ரெட் அலர்ட்’ காரணமாக தேக்கடியில் மே 27 வரை படகு சவாரி ரத்து! | Boat rides in Thekkady cancelled until May 27 due to red alert

Spread the love


குமுளி: இடுக்கி மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேக்கடி படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தின் எல்லையில், கேரள பகுதியில் அமைந்துள்ள தேக்கடியில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மேலும், அந்த மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நீர் சார்ந்த விளையாட்டுகள், படகு சவாரி, மலையேற்றம் உள்ளிட்டவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேக்கடியில் படகு சவாரி வரும் 27-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.





Source link


Spread the love
  • Related Posts

    கம்சாத்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு பிறகு ரஷ்யா, ஜப்பான் கடற்கரையை தாக்கிய சுனாமி | Tsunami hits coasts of Russia Japan after earthquake hits

    Spread the love

    Spread the love      டோக்கியா: ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் கம்சாத்கா தீபகற்பத்தில் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் ஹொக்கைடோ தீவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *