‘சாதிப்பதற்கு எதும் தடையில்லை’ – இடுப்புக்கு கீழ் செயல் இழந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வு எழுதும் ப்ளஸ் டூ மாணவி

Spread the love


Last Updated:

இருசக்கர வாகனத்தில் தேநீர் விற்கும் தந்தை, குடும்பத்தை கவனிக்கும் தாய் என குடும்ப வறுமையும் தாண்டி, வாழ்க்கையில் சாதிப்பதற்கு எதும் தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் மாணவி சிந்து.

உதவியாளர் துணை கொண்டு  தேர்வு எழுதும் மாணவிஉதவியாளர் துணை கொண்டு  தேர்வு எழுதும் மாணவி
உதவியாளர் துணை கொண்டு தேர்வு எழுதும் மாணவி

‘சாதிப்பதற்கு எதுவும் தடையில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இடுப்புக்கு கீழ் செயல் இழந்து முடங்கிய நிலையிலும் 12ம் வகுப்பு மாணவி பொதுத் தேர்வை உதவியாளர் துணை கொண்டு எழுதுகிறார்.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சிந்து, தனது வீட்டின் அருகே உள்ள கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து, தற்போது நடமாட முடியாத நிலையில் உள்ளார். தியாகராய நகரில் உளள வித்யோதயா மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்த இவரின் வாழ்வில், 2020-ம் ஆண்டு சோகமான ஆண்டாக மாறியது. தோழிகளுடன் விளையாடிய போது, தனது வீட்டின் அருகில் உள்ள கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததில், இடுப்புக்கு கீழ் செயல் இழந்து முடங்கினார்.

இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 மாதத்திற்கு மேல் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத போதும், ஆசிரியர்கள், பெற்றோர் கொடுத்த நம்பிக்கையால் வீட்டில் இருந்தே படித்து வந்தார். தற்போது, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை உதவியாளர் துணை கொண்டு எழுதுகிறார்.

இருசக்கர வாகனத்தில் தேநீர் விற்கும் தந்தை, குடும்பத்தை கவனிக்கும் தாய் என குடும்ப வறுமையும் தாண்டி, வாழ்க்கையில் சாதிப்பதற்கு எதும் தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் மாணவி சிந்து. இதற்கு, அவரின் தலைமையாசிரியர் ஊக்கமாக இருந்ததுடன், 12-ம் வகுப்புக்கான கட்டணத்தையும் பள்ளி நிர்வாகமே ஏற்றுக்கொண்டதாக மாணவியின் தந்தை கூறுகிறார்.

கைப்பந்துப் போட்டியில் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடிய சிந்து, இன்று வீட்டிற்குள் முடங்கியுள்ளார். இருந்த போதும், கல்வியே வாழ்வில் ஒளியேற்றும் என்ற நம்பிக்கையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகிறார்.



Source link


Spread the love
  • Related Posts

    கம்சாத்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு பிறகு ரஷ்யா, ஜப்பான் கடற்கரையை தாக்கிய சுனாமி | Tsunami hits coasts of Russia Japan after earthquake hits

    Spread the love

    Spread the love      டோக்கியா: ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் கம்சாத்கா தீபகற்பத்தில் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் ஹொக்கைடோ தீவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *