15 ஆண்டுகால கனவு… உயிர்பெற்ற கடையெழு வள்ளல்கள்… 2,000க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள்… செம்மொழி பூங்காவின் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா? | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகளுடன் ரோஜா தோட்டம் செம்மொழிப் பூங்காவிற்கு மணம் சேர்த்துள்ளது

கோவை செம்மொழி பூங்கா
கோவை செம்மொழி பூங்கா

கோவை மக்கள் 15 ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கும் உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்காவை இன்று திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். செந்தமிழ்க்கு ’செம்மொழி’ எனும் பெருமை கிடைத்ததை கொண்டாடும் வகையில், கோவையில் ’செம்மொழிப் பூங்கா’ அமைக்கப்படும் என 2010ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தக் கூடிய நடைபாதை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் 165 ஏக்கரில் ’செம்மொழிப் பூங்கா’ அமைக்கப்படும் என 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதன்படி, 2023ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய முதல்வர், முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்க சுமார் 208 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். தாவரவியல் பூங்கா, சூரியதகடு, சிற்பங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளுடன் ’செம்மொழிப் பூங்கா’ அமைக்கப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த இப்பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த்தோட்டம், மணம்கமிழ் தோட்டம், மூங்கில் தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலங்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகளுடன் ரோஜா தோட்டம் செம்மொழிப் பூங்காவிற்கு மணம் சேர்த்துள்ளது.

இப்பூங்கா வளாகத்தில் கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. திறந்தவெளி அரங்கு, உணவகம், ஒப்பனை அறை, செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களும் உள்ளன நகரின் மையப் பகுதியில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டு இருப்பதை சூழலியல் ஆர்வலர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.

செம்மொழிப் பூங்கா கோவையின் அடையாளமாக மாறும் என்கிறார் இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் ஜலாலுதீன். ’செம்மொழிப் பூங்கா’ இயற்கை வழிமுறையில், கொடியாய், மலராய், தரையில் தவழும், விரியும், படரும் வகையில் அடுத்த விரிவாக்கத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கபட்டு இருப்பதாகக் கூறுகிறார் பூங்கா வடிவமைப்பாளர் ரூபத் ஆனந்த். சூழல் மாசை குறைக்கவும், பல்லுயிர் பெருக்கத்திற்கு உறுதுணையாகவும் இருக்கும் இத்தகைய செம்மொழிப் பூங்காக்களை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டுமென்பதே சூழல் ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் கிருஷ்ணாவுடன் செய்தியாளர் குருசாமி.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

15 ஆண்டுகால கனவு… உயிர்பெற்ற கடையெழு வள்ளல்கள்… 2,000க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள்… செம்மொழி பூங்காவின் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?



Source link


Spread the love
  • Related Posts

    அரசு ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தலைமைச் செயலாளர் எச்சரிக்கை | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:December 10, 2025 10:20 PM IST 11ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. News18 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நாளை (11ஆம் தேதி)…


    Spread the love

    Anant Ambani : மனிதாபிமான பணிகளுக்காக சர்வதேச விருது வென்ற ஆனந்த் அம்பானி.. ஆசியாவின் முதல் நபராக கவுரவம்… | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Last Updated:December 08, 2025 9:28 PM IST விலங்குகள் நமக்கு சமநிலையை கற்பிக்கின்றன. அவற்றிலிருந்து பணிவையும் நம்பிக்கையையும் நாம் கற்றுக்கொள்ள முடியும். விருதுகளுடன் ஆனந்த் அம்பானி மனிதாபிமான பணிகளுக்கான சர்வதேச விருதினை வந்தாரா வனவிலங்கு பாதுகாப்பு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *