மேடையிலேயே மயக்கம் போட்டு விழுந்த நடிகர் விஷால்… விழுப்புரம் நிகழ்ச்சியில் ஷாக்…

Spread the love


Last Updated:

இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விஷால்விஷால்
விஷால்

விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டியை சிறப்பு விருந்தினராக காண வந்த நடிகர் விஷால் மேடையில் பேசி முடித்தபின் திடீரென மயங்கி சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி செவ்வாய் அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன் முக்கிய விழாவாக திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெறும்.

இதனை முன்னிட்டு சென்னை திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடலில் மிஸ் திருநங்கை அழகி போட்டி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஷால் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். போட்டியின் போது நடிகர் விஷால் பேசி திருநங்கைகளை ஊக்கப்படுத்தினார். தனது பேச்சை அவர் முடித்த போது திடீரென மேடையிலேயே மயங்கி சரிந்தார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில வினாடிகள் மயங்கி கிடந்த விஷால் பின்னர் சுதாரித்து மெதுவாக எழுந்திருக்க தொடங்கினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் விஷாலை கைகளால் பற்றி பிடித்தவாறு விழா நடக்கும் இடத்தில் இருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் விஷால் இயல்பு நிலைமைக்கு திரும்பினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

[]

Source link


Spread the love
  • Related Posts

    “வாழ்நாள் முழுவதும் உன் அருகில் நான்…” – 10வது திருமண நாள்… அசினின் கணவர் நெகிழ்ச்சி! | பொழுதுபோக்கு செய்திகள்

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 8:40 PM IST மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு அசின் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் இருக்கிறார். News18…


    Spread the love

    Bigg Boss 9 Title Winner | பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் இவர் தான்.. வெளியான கணிப்பு! | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      தொடர்ந்து 6 பேர் ஃபினாலேவிற்கு தகுதி பெற்ற நிலையில் வினோத் ரூ.18 லட்சத்துடன் பெட்டியை எடுத்து வெளியேறினார். அதே போல், சாண்ட்ரா எவிக்‌ஷன் செய்யப்பட்டார். கடைசியாக சபரி, விக்கல்ஸ் விக்ரம், அரோரா, திவ்யா ஆகிய 4 பேரும்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *