மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருள்நிதி.. நேரில் வந்த முதல்வர் – அவருக்கு என்னாச்சு? | பொழுதுபோக்கு

Spread the love


Last Updated:

அருள்நிதி படப்பிடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி, முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு, அறுவை சிகிச்சை நடைபெற்றது.

News18
News18

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அருள்நிதியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் இவர். கருணாநிதியின் மூத்த மகன் தமிழரசுவின் மகன்தான் அருள்நிதி. வம்சம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

இதன்பின் உதயன், மௌனகுரு, டிமாண்டி காலனி, கே-13, இரவுக்கு ஆயிரம் கண்கள், திருவின் குரல் என கவனிக்கத்தக்க படங்களில் நடித்து நடிகராக தன்னை நிலைநிறுத்தினார். கடந்த ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி 2 படம் நல்ல வெற்றியைப் பெற்றது. தற்போது அதன் அடுத்த பாகத்தில் நடித்து வருகிறார். சில நாட்கள் முன்பு அவர் நடித்த ராம்போ படம் வெளியானது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி அருள்நிதி காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துவரும் அவரை தற்போது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பார்த்து நலம் விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அருள்நிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவரின் உடல்நிலை மற்றும் அறுவை சிகிச்சை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    “வாழ்நாள் முழுவதும் உன் அருகில் நான்…” – 10வது திருமண நாள்… அசினின் கணவர் நெகிழ்ச்சி! | பொழுதுபோக்கு செய்திகள்

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 8:40 PM IST மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு அசின் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் இருக்கிறார். News18…


    Spread the love

    Bigg Boss 9 Title Winner | பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் இவர் தான்.. வெளியான கணிப்பு! | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      தொடர்ந்து 6 பேர் ஃபினாலேவிற்கு தகுதி பெற்ற நிலையில் வினோத் ரூ.18 லட்சத்துடன் பெட்டியை எடுத்து வெளியேறினார். அதே போல், சாண்ட்ரா எவிக்‌ஷன் செய்யப்பட்டார். கடைசியாக சபரி, விக்கல்ஸ் விக்ரம், அரோரா, திவ்யா ஆகிய 4 பேரும்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *