மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் கைது | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் மற்றும் 15 பேர் கைது. 200 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக விசாரணை நடக்கிறது.

மேயர் இந்திராணியின் கணவர் கைதுமேயர் இந்திராணியின் கணவர் கைது
மேயர் இந்திராணியின் கணவர் கைது

சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பதில் 200 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து மண்டல குழு தலைவர்கள் மற்றும் இரண்டு நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். மேலும் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் உள்பட 15 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முறைகேடு புகார் தொடர்பாக மதுரை மாநகராட்சியில் மாமன்ற செயலாளராக பணியாற்றிவிட்டு தற்போது பணிமாறுதலில், தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி ஆணையராக உள்ள சுரேஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக டிஐஜி அபினவ் குமார் தலைமையிலான சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை சென்னையில் வைத்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்



Source link


Spread the love
  • Related Posts

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : கலைக்கல்லூரி மாணவிகள் சைக்கிள்  பேரணி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 11:49 PM IST இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள்  போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர் சைக்கிள் பேரணி கொடைக்கானல் ஏரிச்சாலை…


    Spread the love

    கரூர் அசம்பாவிதம்; விஜய்யிடம் சிபிஐ விசாரணை: கனிமொழி எம்.பி. கொடுத்த பதில் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 1:33 PM IST கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார். News18 அதிமுக பொதுச் செயலாளர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *