புயலுக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்த மீனவ பெண்கள்…! | ராமநாதபுரம்

Spread the love


Last Updated:

டிட்வா புயலுக்கு பின் வானிலை சீராகி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் பாம்பனில் கருவாடு உற்பத்தி தொடங்கி கருவாடு காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Rapid Read
+

டிட்வா

டிட்வா புயலுக்கு பின் பழைய நிலைக்கு திரும்பிய பாம்பன்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக இருக்கும் நிலையில், பிடித்து வரும் மீன்களில் பாதி மீன்கள் கருவாடு உற்பத்தி செய்யப்படுகிறது. கடலில் பலத்த காற்று வீசும் நேரம் மற்றும் மீன்பிடி தடைக்காலம் போன்ற நேரங்களில் கருவாடு உற்பத்தி தொழில் கை கொடுப்பதால் இதில் மீனவர்கள், மீனவ பெண்கள் ஈடுபட்டு பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து கருவாடு உற்பத்தி தொழில் முடங்கியது. அவ்வப்போது வெயில் அடிக்கும் நேரத்தில் கருவாடு காய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வங்ககடலில் டிட்வா புயல் உருவாகி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு வாரமாக மீன்பிடி தொழிலும் பாதித்து, கருவாடு உற்பத்தியும் பாதித்தது. இதனைத்தொடர்ந்து புயல் வலுவிழந்த நிலையில் சீரான வானிலை நிலவி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் கருவாடு உற்பத்தி மீண்டும் தொடங்கி காய வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஒரு வாரத்திற்கு முன்பு மீன்பிடிக்கச் செல்லும்போது மீன்களை வாங்கி வைத்தோம். அதன்பின் மழை பெய்ய தொடங்கியதால் கருவாடு உற்பத்தி செய்ய‌முடியாத நிலை ஏற்பட்டு, உப்பு வைத்து பாதுகாத்து வைத்தோம். தற்போது சற்று வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால் மீண்டும் உற்பத்தியை ஆரம்பித்துள்ளோம்.

உற்பத்தி குறைவாக இருப்பதால் இரட்டிப்பு விலைக்கு வெளியில் விற்க்கப்படுகிறது.‌ இங்கு வாங்கி சென்று வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் எங்களிடம் குறைவான விலைக்கு வாங்கி மழையினை காரணம் காண்பித்து, வெளியில் பாதிக்கு பாதி விலை உயர்த்தி விற்பனை செய்கின்றனர். உள்ளூரில் உற்பத்தி செய்யும் மீனவர்களுக்கு லாபம் இல்லாமல் உள்ளது‌. ஆனால் வியாபாரிகள் பல மடங்கு லாபம் வைத்து விற்பனை செய்வதால் விலை உயர்ந்துள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link


Spread the love
  • Related Posts

    மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்

    Spread the love

    Spread the love      மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில்…


    Spread the love

    ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் இ-பாஸ் பதிவு குறித்து அதிகாரிகள் சோதனை தீவிரம்

    Spread the love

    Spread the love      அரசு பேருந்து, ஆம்புலன்ஸ் வாகனம், சரக்கு வாகனங்கள், நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள், நீலகிரி மாவட்டத்தில் வசிப்போருக்கு இ-பாஸ் தேவையில்லை. தற்போது வரை 2,500 வாகனங்கள் வந்துள்ளன. இந்த நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்லாறு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *