பிரான்ஸைவிட்டு வெளியேறிய டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் – பின்னணி என்ன? | Telegram CEO Pavel Durov allowed to leave France

Spread the love


பாரிஸ்: டெலிகிராம் மெஸஞ்சரின் சிஇஓ பவெல் துரோவ், பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக, சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு அந்நிறுவனம் துணை போன குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்ற நிலையில் பிரான்ஸில் இருந்து வெளியேறக் கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவர் பிரான்ஸ் நாட்டை விட்டு தற்போது வெளியேறி உள்ளதை அந்த நாட்டின் ஊடகம் உறுதி செய்துள்ளது. அதிகாரிகளின் அனுமதியுடன் அவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து மார்ச் 15-ம் தேதி அன்று புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் அங்கிருந்து துபாய் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து சில வாரங்கள் வெளியில் இருக்கலாம் என துரோவ் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அனுமதி தந்துள்ளதாகவும் தகவல்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் நாட்டில் விமான நிலையத்துக்கு வெளியே துரோவ் கைது செய்யப்பட்டார். டெலிகிராம் மூலம் நடைபெறும் சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு அந்நிறுவனம் துணை போனது, குற்றவியல் நடவடிக்கையை கண்காணிக்க தவறியது மற்றும் பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை பிரான்ஸ் அரசு கைது செய்தது. இந்த வழக்கில் அவருக்கு அடுத்த சில நாட்களில் நிபந்தனை ஜாமீன் தரப்பட்டது. இருப்பினும் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. அதற்கான தடையும் பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து அரசுடன் சுமூகமாக செல்லும் வகையில் டெலிகிராமில் சில மாற்றங்களை துரோவ் செய்தார். இந்த நிலையில் தற்போது அவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.





Source link


Spread the love
  • Related Posts

    “வரிகளை கணிசமாக உயர்த்துவேன்” – இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Trump threatens to substantially raise tariff on India for buying Russian oil

    Spread the love

    Spread the love      ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியா மீது வரிகளை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் “இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது…


    Spread the love

    Dharmasthala | தோண்டத் தோண்ட காத்திருந்த அதிர்ச்சி – தர்மஸ்தலாவில் கண்டெடுக்கப்பட்ட 100 எலும்புகள் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Dharmasthala | தர்மஸ்தலாவில் 6ஆவது நாளில் கண்டெடுக்கப்பட்ட 100 எலும்புகள், மண்டை ஓடு மற்றும் முதுகுத் தண்டு | 11 ஆவது இடத்தில் இருந்து 100 மீட்டரில் தோண்டத் தோண்ட கிடைத்த மனித எலும்புகள் | Breaking…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *