
Last Updated:
Jayakumar : அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இஸ்லாமியர்களுக்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருந்து உள்ளதாக குறிப்பிட்டார். சிறுபான்மையினர் நலனில் திமுக எப்போதும் இரட்டை வேடம் மட்டுமே போடுவதாகவும் விமர்சித்தார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால்தான் அதிமுகவிற்கு சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைப்பதில்லை என்பது உண்மை இல்லை என்று கூறிய அவர், கூட்டணியில் இருந்தாலும் இரண்டு கட்சிகளும் வெவ்வேறு கோட்பாடுகளும், கொள்கைகளும் கொண்ட கட்சிகள் எனவே தேர்தல் வெற்றி, தோல்விக்கு அவை காரணமாக இருக்காது என்று கூறினார்.
April 29, 2022 6:23 AM IST