
Last Updated:
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் மீட்கபட்ட பெண்ணின் சடலம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை ஊழியர்கள் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் ரயில் பெட்டியின் உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத (40-வயது) மதிக்கதக்க பெண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சென்ற ரயில்வே போலீஸார் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டனர். உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தாம்பரம் ரயில்வே போலீசார் அழுகிய நிலையில் உயிரிழந்த பெண் யார், எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம் ரயில் நிலையத்திற்கு பராமரிப்பு பணிக்காக வந்திருந்த சென்னை – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயிலில் அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : சுரேஷ், சென்னை