ஜாய் கிரிசில்டா அளித்த புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன்! | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜ் புதன்கிழமை நேரில் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.  

News18News18
News18

ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜ் புதன்கிழமை நேரில் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

பிரபல சமையல் கலைஞராகவும், நடிகராகவும் இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப்பாக பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார். தன்னை திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டினார்.

சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் முடித்துக் கொண்டதாக ஜாய் கிரிஸ்டில்டா சமூக வலைதளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். மேலும் தான் ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறி இருந்தார்.

“கடந்த 1.5 ஆண்டுகளாக நாங்கள் திருமணம் செய்து ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம். நான் அவரோடு வாழணும். என் குழந்தைக்கு அவர் தான் அப்பா. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

மேலும் மகளிர் ஆணையத்திலும் ஜாய் கிரிசில்டா புகார் அளித்த நிலையில், வரும் புதன்கிழமை மகளிர் ஆணையத்தில் இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராக வேண்டுமான ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அதே நாளில் புகார் அளித்த பெண்ணும் ஆஜராக வேண்டும் என மகளிர் ஆணையம் சம்மன்



Source link


Spread the love
  • Related Posts

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : கலைக்கல்லூரி மாணவிகள் சைக்கிள்  பேரணி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 11:49 PM IST இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள்  போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர் சைக்கிள் பேரணி கொடைக்கானல் ஏரிச்சாலை…


    Spread the love

    கரூர் அசம்பாவிதம்; விஜய்யிடம் சிபிஐ விசாரணை: கனிமொழி எம்.பி. கொடுத்த பதில் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 1:33 PM IST கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார். News18 அதிமுக பொதுச் செயலாளர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *