சென்னையில் நடந்து சென்ற பெண்ணின் கையை வெட்டி செல்போன் பறிப்பு – 3 பேர் கைது

Spread the love


Last Updated:

Chennai | சென்னை காசிமேட்டில் நடந்து சென்ற பெண்ணை கத்தியால் கையை வெட்டி விட்டு செல்போனை பறித்து சென்ற முகேஷ், கார்த்தி, பரத் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெண்ணிடம் செல்போன் பறித்த இளைஞர் பெண்ணிடம் செல்போன் பறித்த இளைஞர்
பெண்ணிடம் செல்போன் பறித்த இளைஞர்
சென்னை காசிமேட்டில் நடந்து சென்ற பெண்ணின் கையை கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்து சென்ற முகேஷ், கார்த்தி, பரத் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பிரிண்டிங் அச்சகம் ஒன்றில் பணிபுரியும் கமலி (வயது 24 ) என்பவர் முத்தமிழ் நகர், தண்டையார்பேட்டை பகுதியை சார்ந்தவர்.  அச்சகத்திற்கு வேலைக்கு சென்று விட்டு காசிமேடு கடற்கரை ஓரம் நடந்து சென்று  கொண்டிருந்த பொழுது இரவு நேரத்தில் கமலியை மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் கமலியின் கையில் கத்தியால் வெட்டி விட்டு அவரது கையிலிருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமலி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் இச்சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் முகேஷ், கார்த்தி, பரத் ஆகிய மூன்று பேரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Source link


Spread the love
  • Related Posts

    “வரிகளை கணிசமாக உயர்த்துவேன்” – இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Trump threatens to substantially raise tariff on India for buying Russian oil

    Spread the love

    Spread the love      ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியா மீது வரிகளை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் “இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது…


    Spread the love

    Dharmasthala | தோண்டத் தோண்ட காத்திருந்த அதிர்ச்சி – தர்மஸ்தலாவில் கண்டெடுக்கப்பட்ட 100 எலும்புகள் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Dharmasthala | தர்மஸ்தலாவில் 6ஆவது நாளில் கண்டெடுக்கப்பட்ட 100 எலும்புகள், மண்டை ஓடு மற்றும் முதுகுத் தண்டு | 11 ஆவது இடத்தில் இருந்து 100 மீட்டரில் தோண்டத் தோண்ட கிடைத்த மனித எலும்புகள் | Breaking…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *