சென்னையில் குப்பையை தரம் பிரிக்கும் போது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

Spread the love


Last Updated:

Chennai District | சென்னையில் குப்பையை தரம் பிரிக்கும் போது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்புவிஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
சென்னை கொளத்தூர் கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருவெங்கடம். இவர் மாதவரம் மண்டலத்தில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் தொழிற்சாலையில்  தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருவெங்கடம் நேற்று வழக்கம்போல் குப்பையை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென மயக்கமடைந்தார்.

இதையடுத்து இவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து 108 அவசர ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்தனர். உடனடியாக அவரை அவசர ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திருவெங்கடம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனை சார்பில் புறநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாதவரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

மாதவரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருவெங்கடம் மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். குப்பை தரம் பிரிக்கும் தொழிலாளி குப்பை தரம் பிரிக்கும் போது அதிலிருந்து வெளியேறிய விஷவாயு காரணமாகவே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக உடன் பணியாற்றிய சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் : அசோக் குமார்



Source link


Spread the love
  • Related Posts

    ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

    Spread the love

    Spread the love      வாஷிங்​டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம்…


    Spread the love

    Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா Sollathigaram Debate | பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் வியூகம்சாத்தியமா? சவாலா? | Bihar Election Results 2025 | Sollathigaram Debate Follow US :…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *