சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட சென்னை ஒன் செயலி.. 1 ரூபாயில் இனி பயணிக்கலாம்! டிக்கெட் வாங்கு எப்படி தெரியுமா? | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

Chennai One செயலியில் பஸ், மெட்ரோ, புறநகர் ரயில் டிக்கெட்டுகள் BHIM Payments App அல்லது Navi UPI மூலம் ரூ.1-க்கு பெறும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

News18
News18

சென்னை ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) “சென்னை ஒன்” செயலி: பஸ், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் டிக்கெட்டுகளை ரூ.1-க்கு வாங்கும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னைக்கான ஒரே முழுமையான தினசரி பயண செயலியாக “Chennai One” செயலி இருந்துவருகிறது. தமிழ்நாடு முதல்வர், கடந்த 22 செப்டம்பர் 2025 அன்று தொடங்கி வைத்த இந்தச் செயலி இப்போது, பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்களில் பயணிக்க BHIM Payments App அல்லது Navi UPI வழியாக பணம் செலுத்தும் பயணிகளுக்கு வெறும் ரூ.1-க்கு டிக்கெட் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த “One Rupee Ticket” சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் நோக்கம் – அனைவரும் டிஜிட்டல் மற்றும் பணமில்லா (cashless) போக்குவரத்தை முயற்சிக்க ஊக்குவிப்பதாகும்.

இந்த செயலி சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு மாதத்திலேயே; 5.5 லட்சம் பதிவு செய்யப்பட்ட பயனர்கள், 14 லட்சம் பயண தேடல்கள், 8.1 லட்சம் டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளன.

பயணிகள் இந்த செயலியின் சுத்தமான வடிவமைப்பு, ஒரு QR குறியீட்டின் மூலம் பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்கள் மற்றும் காப் ஆகியவற்றை ஒரே இடத்தில் திட்டமிடுதல், பணம் செலுத்துதல், கண்காணித்தல் ஆகிய வசதிகளுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

“சென்னை ஒன் செயலி, நமது நகரின் போக்குவரத்தை வேகமான, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பொருந்தியதாக மாற்றுகிறது. ரூ.1 சலுகையின் மூலம், பஸ், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் ஒரே செயலியில் ஒரே கட்டண முறையில் பயணிக்க முடியும். இது தினசரி பயணத்தை எளிதாக்கி, டிஜிட்டல் பணப்பயன்பாட்டை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சி.” என மாநகரப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த ரூ.1 டிக்கெட் பெறுவது எப்படி?

  1. Chennai One செயலியை திறந்து (அல்லது பதிவிறக்கி), பயண இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. BHIM Payments App அல்லது Navi UPI மூலம் ரூ.1 செலுத்தவும்.
  3. வெற்றிகரமாக டிக்கெட் பெறலாம்.

இந்த சலுகை ஒரு முறை பயணத்திற்கே பொருந்தும். மற்ற சலுகைகளுடன் இணைக்க முடியாது. ஒருமுறை வெற்றிகரமாக பயணித்த பிறகு, தொடர்ந்து வரும் பயணங்களுக்கான வழக்கமான கட்டணங்கள் வசூலிக்கப்படும். இந்த சலுகை நவம்பர் 13, 2025 (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட இருக்கிறது.

[]

Source link


Spread the love
  • Related Posts

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : கலைக்கல்லூரி மாணவிகள் சைக்கிள்  பேரணி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 11:49 PM IST இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள்  போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர் சைக்கிள் பேரணி கொடைக்கானல் ஏரிச்சாலை…


    Spread the love

    கரூர் அசம்பாவிதம்; விஜய்யிடம் சிபிஐ விசாரணை: கனிமொழி எம்.பி. கொடுத்த பதில் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 1:33 PM IST கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார். News18 அதிமுக பொதுச் செயலாளர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *