சிம்பு படத்துக்கு இசையமைக்கும் இளம் இசையமைப்பாளர்.. அதிகாரபூர்வ அறிவிப்பு!

Spread the love


Last Updated:

சிம்பு நடிக்கும் அவரது 48-வது படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News18News18
News18

சிம்பு நடிக்கும் அவரது 48-வது படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘பத்து தல’. சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் இதுதான். பின்னர் 2 வருடங்களாக தற்போது வரை எந்த படமும் வெளியாகவில்லை. அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் அறிவிப்பு அவரது பிறந்த நாளில் வெளியானது. இந்தப் படத்தை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

இது தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் கல்லூரி மாணவர் லுக்கில் நின்றுகொண்டிருந்த சிம்பு, கையில் புத்தகம் வைத்திருப்பார். அதில் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் ‘மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட்’ என எழுதப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்தப் படத்துக்கு யார் இசையமைப்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிம்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் படத்துக்கு இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்புவின் பதிவில், “புதிய அத்தியாயத்தை இசை மற்றும் புதிய எனர்ஜியுடன் தொடங்குகிறேன்.

‘எஸ்டிஆர்49’ படத்துக்கு சாய் அப்யங்கரை வரவேற்கிறேன்” என பதிவிட்டுள்ளார். தவிர, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

[]

Source link


Spread the love
  • Related Posts

    ரஜினியின் 5821 பேட்ஜ் நம்பர் பின்னணி என்ன? – லோகேஷ் கனகராஜ் தகவல்

    Spread the love

    Spread the love      லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, ஆமீர்கான், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கூலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. []…


    Spread the love

    ரஜினியின் ஜெராக்ஸ்… முதல் படம் ரிலீசாகும் முன் நடந்த துயரம்

    Spread the love

    Spread the love      அப்போது எக்காரணத்தை கொண்டும் ரஜினிகாந்தின் பிரதிபலிப்பை வெளிப்படுத்தக் கூடாது என்று படக்குழு ஸ்ட்ரிக்டாக கூறியிருக்கிறது. அப்படி இருந்து ரஜினியின் மேனரிஸத்தை மாஸ்டர் சுரேஷ் வெளிப்படுத்த அவரை கமல்ஹாசன் செல்லமாக திட்டிய சம்பவங்களும் நடந்துள்ளன. இப்படி, ‘கல்லுக்குள் ஈரம்’,…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *