சாலையோர வியாபாரிகள் விவகாரம் … மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

உயர்நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளையும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னையில் பாரிமுனை மற்றும் என்.எஸ்.சி. போஸ் சாலையில், சாலையோர வியாபாரம் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்க சிறப்புக் குழுவை அமைக்கும்படி, மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சாலையோர கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, உயர்நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளையும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், என்.எஸ்.சி. போஸ் சாலையில், சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் பல முறை எச்சரித்தும், சாலையோர வியாபாரம் தொடர்வதாக வேதனை தெரிவித்தனர்.

என்.எஸ்.சி. போஸ் சாலையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக் கூறிய நீதிபதிகள், இந்த சாலையோரம் வியாபாரம் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்கும்படி, மாநகராட்சி ஆணையருக்கு, உத்தரவிட்டனர்.

மேலும், நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளும் வியாபாரம் செய்யக்கூடாத சாலைகளாக இதுவரை அறிவிக்கவில்லை என்றால், அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றைய தினம் உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Source link


Spread the love
  • Related Posts

    பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு – 12 பேர் உயிரிழப்பு

    Spread the love

    Spread the love      மேலும், ‘குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 12 பேரின் உடல்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு (PIMS) கொண்டு செல்லப்பட்டுள்ளன. காயமடைந்த 20 பேரும் அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு…


    Spread the love

    H5N1 வைரஸ் மனிதர்களுக்கு எப்படிப் பரவக்கூடும்? – ஆய்வில் கண்டறிந்த இந்திய விஞ்ஞானிகளின் விளக்கம் | லைஃப்ஸ்டைல்

    Spread the love

    Spread the love      1990-களின் பிற்பகுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட பறவைக் காய்ச்சல் (Bird Flu) வைரஸான H5N1, அவ்வப்போது மனிதர்களையும் பாதித்து வந்த நிலையில், தற்போது அது மனித ஆரோக்கியத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து உலக…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *