சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ திரைப்படம் எப்போது ரிலீஸ்? – படக்குழு அளித்த விளக்கம்!

Spread the love


Last Updated:

சசிகுமார் நடிப்பில் உருவான ‘ஃப்ரீடம்’ படம் பொருளாதார பிரச்சினையால் தள்ளிவைக்கப்பட்டது. சத்யசிவா இயக்கிய இப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஃப்ரீடம்ஃப்ரீடம்
ஃப்ரீடம்

சசிகுமார் நடிப்பில் உருவான ‘ப்ரீடம்’ திரைப்படம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமாருடன் லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ள திரைப்படம் ‘ஃப்ரீடம்’. இந்தப் படத்தில் சுதேஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் உண்மையைக் கதையை இப்படம் பேசுவதாக இயக்குநர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்கான விளம்பரங்கள், ஏற்பாடுகளை படக்குழு தீவிரமாக செய்து முடித்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அன்று பொருளாதார பிரச்சினை காரணமாக படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனையடுத்து ட்ரெய்லர் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பு காரணமாக படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் படம் ஒத்திவைக்கப்பட்டது குறித்து விஜய் கணபதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்பாராத சூழல்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ‘ஃப்ரீடம்’ திரைப்படம் விரைவில் வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[]

Source link


Spread the love
  • Related Posts

    OTT Spot: சூரியின் ‘மாமன்’ ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா? – வெளியான அறிவிப்பு

    Spread the love

    Spread the love      Last Updated:July 28, 2025 9:39 PM IST சூரி நடிப்பில் உருவான ‘மாமன்’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன் சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்…


    Spread the love

    "இலக்கியா விவகாரத்தில் தொடர்பு இல்லை" – திலிப் சுப்பராயன் விளக்கம்!

    Spread the love

    Spread the love      திரைப்பட சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த இலக்கியா, தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு இவர்தான் காரணம் எனவும் பதிவிட்டு இருந்ததால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. [] Source link Spread the love     


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *