கோடை சீசனில் ஊட்டிக்கு 6 லட்சம் பேர் வருகை: இ-பாஸ் நடைமுறையால் கடந்தாண்டைவிட வருகை குறைந்தது | 6 lakh people visit Ooty during the summer season

Spread the love


ஊட்டி: நீலகிரி ​மாவட்​டத்​தில் கடந்த ஒரு மாத​மாக நடந்து வந்த கோடை விழா நிறைவடைந்​தது. கடந்த இரு மாதங்​களில் ஊட்​டிக்கு 6 லட்​சம் சுற்​றுலா பயணி​கள் வந்​துள்​ளனர். கடந்​தாண்டை விட ஒரு லட்​சம் பேர் வருகை குறைந்​த​தால் சுற்​றுலா ஆர்​வலர்​கள் கவலை அடைந்​துள்​ளனர்.

நீல​கிரி மாவட்​டத்​தில் உள்ள சுற்​றுலா தலங்​களுக்கு தின​மும் வெளி​மாவட்​டங்​கள் மட்​டுமின்​றி, வெளி​மாநிலங்​களில் இருந்​தும் பல்​லா​யிரக்​கணக்​கான சுற்​றுலா பயணி​கள் வந்து செல்​கின்​றனர்.

கோடை கால​மான ஏப்​ரல், மே மாதங்​களில் குளி​ரான காலநிலையை அனுப​விப்​ப​தற்​காக அதி​களவி​லான சுற்​றுலா பயணி​கள் வரு​வது வழக்​கம். அவ்​வாறு வரும் சுற்​றுலா பயணி​களை மகிழ்விக்​கும் வகை​யில், கோடை விழா நடத்​தப்​படு​கிறது.

இந்​தாண்டு கோடை விழாவையொட்டி தோட்​டக்​கலைத் துறை சார்​பில் காய்​கறி கண்​காட்​சி, ரோஜா கண்​காட்​சி, பழக்​கண்​காட்​சி, வாசனை திர​வியக் கண்​காட்​சி, மலர் கண்​காட்சி உள்​ளிட்ட பல்​வேறு நிகழ்​வு​கள் நடத்​தப்​பட்​டன. இந்​தாண்டு கடந்த மாதம் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மலர் கண்​காட்சி நடை​பெற்​றது. 11 நாட்​கள் நடை​பெற்ற மலர் கண்​காட்​சியை 1.84 லட்​சம் சுற்​றுலா பயணி​கள் கண்டு ரசித்​துள்​ளனர்.

கடந்த ஆண்டு ஏப்​ரல்​,மே மாதங்​களில் மொத்​தம் 7 லட்​சத்து 3 ஆயிரத்து 362 பேர் வந்​திருந்த நிலை​யில், தற்​போது 6 லட்​சத்து 6 ஆயிரம் சுற்​றுலா பயணி​கள் மட்​டுமே வருகை தந்​துள்​ளனர். கடந்​தாண்​டுடன் ஒப்​பிடு​கை​யில் இந்த முறை கடந்த 2 மாதங்​களில் மட்​டும் ஒரு லட்​சம் சுற்​றுலா பயணி​களின் வருகை குறைந்​துள்​ளது.

இதுகுறித்து சுற்​றுலா ஆர்​வலர்​கள் கூறிய​தாவது: கோடை காலத்​தில் நீல​கிரி மாவட்​டத்​தில் போக்​கு​வரத்து நெரிசலை குறைக்​கும் வகை​யில், சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுப்​படி, கடந்​தாண்டு இ-பாஸ் நடை​முறையை தமிழக அரசு அறி​வித்​தது.

இதன் காரண​மாக​வும், கனமழை காரண​மாக​வும் பெரும்​பாலான சுற்​றுலா பயணி​கள் ஊட்​டிக்கு வரு​வதை தவிர்த்​தனர். இ-பாஸ் நடை​முறை மேலும் தொடர்ந்​தால், சுற்​றுலாப் பயணி​கள் எண்​ணிக்​கை​ குறை​யும். இதன் காரண​மாக நீல​கிரி மாவட்​டத்​தில் சுற்​றுலா பயணி​களை மட்​டும் நம்பி தொழில் செய்து வரு​வோர் பலரும்​ பா​திக்​கப்​படுவர்​ என்​றனர்​.





Source link


Spread the love
  • Related Posts

    ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை | US Government Bans 32 Companies who Helped Iran

    Spread the love

    Spread the love      வாஷிங்​டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு நாடு​களில் இருந்து ரசாயனங்​கள் மற்​றும் உதிரிபாகங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்​களை விநி​யோகம்…


    Spread the love

    Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | “திமுக அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்” – எஸ்.ஜி.சூர்யா Sollathigaram Debate | பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் வியூகம்சாத்தியமா? சவாலா? | Bihar Election Results 2025 | Sollathigaram Debate Follow US :…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *