கோடை சீசனில் ஊட்டிக்கு 6 லட்சம் பேர் வருகை: இ-பாஸ் நடைமுறையால் கடந்தாண்டைவிட வருகை குறைந்தது | 6 lakh people visit Ooty during the summer season

Spread the love


ஊட்டி: நீலகிரி ​மாவட்​டத்​தில் கடந்த ஒரு மாத​மாக நடந்து வந்த கோடை விழா நிறைவடைந்​தது. கடந்த இரு மாதங்​களில் ஊட்​டிக்கு 6 லட்​சம் சுற்​றுலா பயணி​கள் வந்​துள்​ளனர். கடந்​தாண்டை விட ஒரு லட்​சம் பேர் வருகை குறைந்​த​தால் சுற்​றுலா ஆர்​வலர்​கள் கவலை அடைந்​துள்​ளனர்.

நீல​கிரி மாவட்​டத்​தில் உள்ள சுற்​றுலா தலங்​களுக்கு தின​மும் வெளி​மாவட்​டங்​கள் மட்​டுமின்​றி, வெளி​மாநிலங்​களில் இருந்​தும் பல்​லா​யிரக்​கணக்​கான சுற்​றுலா பயணி​கள் வந்து செல்​கின்​றனர்.

கோடை கால​மான ஏப்​ரல், மே மாதங்​களில் குளி​ரான காலநிலையை அனுப​விப்​ப​தற்​காக அதி​களவி​லான சுற்​றுலா பயணி​கள் வரு​வது வழக்​கம். அவ்​வாறு வரும் சுற்​றுலா பயணி​களை மகிழ்விக்​கும் வகை​யில், கோடை விழா நடத்​தப்​படு​கிறது.

இந்​தாண்டு கோடை விழாவையொட்டி தோட்​டக்​கலைத் துறை சார்​பில் காய்​கறி கண்​காட்​சி, ரோஜா கண்​காட்​சி, பழக்​கண்​காட்​சி, வாசனை திர​வியக் கண்​காட்​சி, மலர் கண்​காட்சி உள்​ளிட்ட பல்​வேறு நிகழ்​வு​கள் நடத்​தப்​பட்​டன. இந்​தாண்டு கடந்த மாதம் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மலர் கண்​காட்சி நடை​பெற்​றது. 11 நாட்​கள் நடை​பெற்ற மலர் கண்​காட்​சியை 1.84 லட்​சம் சுற்​றுலா பயணி​கள் கண்டு ரசித்​துள்​ளனர்.

கடந்த ஆண்டு ஏப்​ரல்​,மே மாதங்​களில் மொத்​தம் 7 லட்​சத்து 3 ஆயிரத்து 362 பேர் வந்​திருந்த நிலை​யில், தற்​போது 6 லட்​சத்து 6 ஆயிரம் சுற்​றுலா பயணி​கள் மட்​டுமே வருகை தந்​துள்​ளனர். கடந்​தாண்​டுடன் ஒப்​பிடு​கை​யில் இந்த முறை கடந்த 2 மாதங்​களில் மட்​டும் ஒரு லட்​சம் சுற்​றுலா பயணி​களின் வருகை குறைந்​துள்​ளது.

இதுகுறித்து சுற்​றுலா ஆர்​வலர்​கள் கூறிய​தாவது: கோடை காலத்​தில் நீல​கிரி மாவட்​டத்​தில் போக்​கு​வரத்து நெரிசலை குறைக்​கும் வகை​யில், சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுப்​படி, கடந்​தாண்டு இ-பாஸ் நடை​முறையை தமிழக அரசு அறி​வித்​தது.

இதன் காரண​மாக​வும், கனமழை காரண​மாக​வும் பெரும்​பாலான சுற்​றுலா பயணி​கள் ஊட்​டிக்கு வரு​வதை தவிர்த்​தனர். இ-பாஸ் நடை​முறை மேலும் தொடர்ந்​தால், சுற்​றுலாப் பயணி​கள் எண்​ணிக்​கை​ குறை​யும். இதன் காரண​மாக நீல​கிரி மாவட்​டத்​தில் சுற்​றுலா பயணி​களை மட்​டும் நம்பி தொழில் செய்து வரு​வோர் பலரும்​ பா​திக்​கப்​படுவர்​ என்​றனர்​.





Source link


Spread the love
  • Related Posts

    Link Alternatif Trisula88: Solusi Login Tanpa Gangguan

    Spread the love

    Spread the love     Di era digital saat ini, platform judi online semakin banyak diminati oleh berbagai kalangan. Salah satu situs judi online yang cukup populer adalah Trisula88. Situs ini menawarkan berbagai…


    Spread the love

    முத்துக்குடா கடற்கரை சுற்றுலா தலம் திறப்பு – படகு சேவையும் தொடக்கம் | Muthukuda Beach Tourist Spot Opened and Boat Service Also Commences

    Spread the love

    Spread the love      புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டம் முத்துக்குடாவில் ரூ.3.06 கோடியில் படகு குழாம், பார்வையாளர் கூடம், நிர்வாகக் கட்டிடம், வாகன நிறுத்துமிடம், நடை பாதை, குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் கடற்கரை சுற்றுலாத்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *