கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள் | Tourists flock to Kodaikanal

Spread the love


தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மகாவீர் ஜெயந்தி, சனி, ஞாயிறு வார விடுமுறை, தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை என தொடர்ந்து அரசு விடுமுறை தினங்களால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த 4 நாட்களாக அதிகரித்துக் காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வந்தனர்.

கடந்த சில நாட்களாக கோடை மழை காரணமாக கொடைக்கானலில் ரம்மியமான தட்பவெப்ப நிலை இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மோயர் பாய்ன்ட், குணா குகை, தூண் பாறை, பைன் மரக் காடுகள், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனர். அதிக வாகனங்களால் கொடைக்கானிலில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் ஒருநாள் சுற்றுலாவா கொடைக்கானல் வந்தவர்கள், அனைத்து சுற்றுலாத் தலங்களையும் முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, “கொடைக்கானலில் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை. சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எனவே, பார்க்கிங் வசதியை மேம்படுத்த வேண்டும்” என்றனர்.

கொடைக்கானலில் நேற்று அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.





Source link


Spread the love
  • Related Posts

    காசாவை முழுமையாக ‘கைப்பற்ற’ இஸ்ரேல் திட்டம் – எப்படி நடக்கும் இந்த ‘ஆக்கிரமிப்பு’? | Will Israel fully reoccupy Gaza? – The support and opposition for Netanyahu

    Spread the love

    Spread the love      காசாவில் பசியில் கதறும் குழந்தைகள் மீது சர்வதேச ஊடகங்களின் கரிசனம் இருக்க, ஊடகப் பார்வையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகப் பார்வையையும் இஸ்ரேலின் பக்கம் திருப்பும் விதமாக, ஒரு வரலாற்று முடிவை நோக்கி முன்னேறி வருகிறார் அந்நாட்டுப் பிரதமர்…


    Spread the love

    பரோட்டா கடையில் QR கோடு மோசடி.. 5 ஆண்டுகளாக ஓனரை ஏமாற்றி வந்த ஊழியர் மீது வழக்கு | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:August 07, 2025 9:54 PM IST நாகர்கோயிலில் பரோட்டா கடையில் கியூ.ஆர். கோடை மாற்றி 10 லட்சம் பண மோசடி செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். QR கோடு மோசடி அரசியல்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *