குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பச்சை ரோஜா | green rose blooming in Sims Park, Coonoor

Spread the love


நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கு நடவு செய்யப்பட்ட பச்சை ரோஜா பூத்துக் குலுங்குவது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் பெற்றது. ஆண்டுதோறும் கோடை விழா நாட்களில் இங்கு பழக் கண்காட்சி நடத்தப்படுகிறது. சீசன் நாட்களைத் தவிர சாதரண நாட்களில் நாளென்றுக்கு 500 முதல் 3,500 சுற்றுலாப் பயணிகள் சிம்ஸ் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள் மற்றும் மலர்ச் செடிகள் உள்ள நிலையில், பூங்கா சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வரும் மே மாதம் நடைபெற உள்ள கோடை சீசனுக்கு சிம்ஸ் பூங்காவில் உள்ள நர்சரியில் 1,000-க்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் தொட்டியில் நடவு செய்யபட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல வண்ணங்களிலான ரோஜா மலர்களும் அடங்கும். குறிப்பாக, அங்கு நடவு செய்யப்பட்டுள்ள பச்சை ரோஜாக்கள் பூக்கத் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.





Source link


Spread the love
  • Related Posts

    காசாவை முழுமையாக ‘கைப்பற்ற’ இஸ்ரேல் திட்டம் – எப்படி நடக்கும் இந்த ‘ஆக்கிரமிப்பு’? | Will Israel fully reoccupy Gaza? – The support and opposition for Netanyahu

    Spread the love

    Spread the love      காசாவில் பசியில் கதறும் குழந்தைகள் மீது சர்வதேச ஊடகங்களின் கரிசனம் இருக்க, ஊடகப் பார்வையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகப் பார்வையையும் இஸ்ரேலின் பக்கம் திருப்பும் விதமாக, ஒரு வரலாற்று முடிவை நோக்கி முன்னேறி வருகிறார் அந்நாட்டுப் பிரதமர்…


    Spread the love

    பரோட்டா கடையில் QR கோடு மோசடி.. 5 ஆண்டுகளாக ஓனரை ஏமாற்றி வந்த ஊழியர் மீது வழக்கு | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:August 07, 2025 9:54 PM IST நாகர்கோயிலில் பரோட்டா கடையில் கியூ.ஆர். கோடை மாற்றி 10 லட்சம் பண மோசடி செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். QR கோடு மோசடி அரசியல்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *