கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. முதன்முறையாக மனம் திறந்த அஜித் குமார்.. சொன்னது என்ன? | பொழுதுபோக்கு

Spread the love


Last Updated:

கிரிக்கெட் மேட்ச்சை பார்ப்பதற்கு கூட்டமாக செல்கிறார்கள். அங்கு நெரிசல் ஏற்படுவதில்லை

அஜித்
அஜித்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பரப்புரைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் 10 பேர் உள்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டது.

தற்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ரூ. 20 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை அழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள நடிகர் அஜித் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது-

கூட்ட நெரிசல் சம்பத்திற்கு அந்த தனி நபரை மட்டுமே காரணமாக சொல்ல முடியாது. எல்லோரும் அதற்கு பொறுப்பு. கிரிக்கெட் மேட்ச்சை பார்ப்பதற்கு கூட்டமாக செல்கிறார்கள். அங்கு நெரிசல் ஏற்படுவதில்லை. ஏன் தியேட்டர்களிலும், சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சியிலும் ஏற்படுகிறது?

ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி நாம் யார் என்பதை காட்டக்கூடிய சமுதாயமாக மாறிவிட்டோம். இது முடிவுக்கு வர வேண்டும்.

அதனால் என்ன ஏற்படுகிறது என்றால், ஒட்டுமொத்த திரைத்துறையும் மோசமாக சித்தரிக்கப்படுகிறது. நாங்கள் அதை விரும்பவில்லை. ரசிகர்களின் அன்பை விரும்புகிறோம். அதற்காகத்தான் கடினமாக உழைக்கிறோம். ரசிகர்கள் அன்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன. என்று தெரிவித்தார்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    Bigg Boss 9 Wild Card | வைல்டு கார்டு மூலம் உள்ளே செல்லும் 4 பேர் இவர்கள் தான்.. முன்னரே அறிவித்த பிக்பாஸ்..! | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      அப்படி இந்த சீசனில் வைல்டு கார்ட் மூலம் உள்ளே வரும் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதாவது சின்னத்திரை, வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகர் பிரஜின், மேலும் சின்னத்திரை பிரபலங்களான சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா…


    Spread the love

    விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… நடிப்பதை நிறுத்திய நடிகை ரோஜா.. என்ன சொன்னார் தெரியுமா?  | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      கடந்த 1992-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான ‘செம்பருத்தி’ திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. ‘சூரியன்’, ‘உழைப்பாளி’, ‘அதிரடிப் படை’, ‘ராஜமுத்திரை’, ‘ராசைய்யா’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘என் ஆசை ராசாவே’, ‘ஏழையின்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *