கன்னியாகுமரியில் படகு சேவைக்கான கட்டணம் உயர்வு | Boat Service Fare Hike on Kanyakumari

Spread the love


நாகர்கோவில்: கன்னியாகுமரியில் படகு சேவைக்கான கட்டணம் வியாழக்கிழமை முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி, சாதாரண கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100ஆக உயர்த்தப்படுகிறது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பறைகளில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவை அமைந்துள்ளன. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகு பயணம் மேற்கொள்கின்றனர். கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறும். இந்நிலையில் படகு, கட்டணம் நாளை (மே 5) முதல் உயர்கிறது. சாதாரண கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படுகிறது. மாணவர்களுக்கான சலுகைக் கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆக உயர்த்தப்படுகிறது.

அதேவேளையில், சிறப்பு கட்டணம் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.300 ஆக நீடிக்கிறது. கட்டண உயர்வு நாளை நடைமுறைக்கு வருகிறது என பூம் புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.





Source link


Spread the love
  • Related Posts

    Link Alternatif Trisula88: Solusi Login Tanpa Gangguan

    Spread the love

    Spread the love     Di era digital saat ini, platform judi online semakin banyak diminati oleh berbagai kalangan. Salah satu situs judi online yang cukup populer adalah Trisula88. Situs ini menawarkan berbagai…


    Spread the love

    முத்துக்குடா கடற்கரை சுற்றுலா தலம் திறப்பு – படகு சேவையும் தொடக்கம் | Muthukuda Beach Tourist Spot Opened and Boat Service Also Commences

    Spread the love

    Spread the love      புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டம் முத்துக்குடாவில் ரூ.3.06 கோடியில் படகு குழாம், பார்வையாளர் கூடம், நிர்வாகக் கட்டிடம், வாகன நிறுத்துமிடம், நடை பாதை, குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் கடற்கரை சுற்றுலாத்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *