ஒரு ரூபாயில் எங்கும் பயணிக்கலாம் – ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய சலுகை அறிமுகம் | one rupee travel introduced on the Chennai One app

Spread the love


சென்னை: ‘சென்னை ஒன்’ செயலி​யில் தலா ஒரு ரூபாய் கட்​ட​ணம் செலுத்​தி, மெட்​ரோ, மாநகர பஸ், ரயி​லில் ஒரு முறை சலுகை பயணம் செய்​யும் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில், மின்​சார ரயில், மெட்​ரோ, மாநகர பேருந்​து, ஆட்​டோ, டாக்​சிகளில் பயணிக்க வசதி​யாக ‘சென்னை ஒன்’ செயலி கடந்த செப்​.22-ம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்​தது.

இந்த செயலி​யில் அனைத்து பொது​போக்​கு​வரத்து பயணத்​துக்​கான டிக்​கெட் பெறும் வசதி இருப்​ப​தால், பயணி​களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது. இது​வரை​யில் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தினசரி பயன்​படுத்தி வரு​கின்​றனர்.

ஒரு டிக்​கெட்​டுக்கு ஒரு முறை: இந்​நிலை​யில், இந்த செயலியை ஊக்​குவிக்​கும் வகை​யில், புதிய சலுகை அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அதன்​படி, பிஎச்​ஐஎம் எனப்​படும் பீம் மற்​றும் நேவி செயலியை பயன்​படுத்தி யுபிஐ வாயி​லாக பணம் செலுத்​து​வோர், சென்னை மெட்ரோ ரயில் மற்​றும் மாநகர பேருந்​துகளின் முதல் டிக்​கெட்டை ஒரு ரூபாய் மட்​டுமே செலுத்தி முதல் பயணம் செய்ய முடி​யும்.

அதாவது, விமான நிலை​யத்​தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயி​லில் செல்​வதற்கு ரூ.40 கட்​ட​ணம். செயலி​யில் ரூ. 32-ல் டிக்​கெட் புக்​கிங் செய்​ய​லாம். ஆனால், சென்னை ஒன்று செயலியை பயன்​படுத்தி ‘பீம் மற்​றும் நேவி’ செயலிகள் வாயி​லாக டிக்​கெட் எடுத்​தால் ஒரு ரூபாய் கட்​ட​ணம் செலுத்​தி​னால் மட்​டும் போதும். இதே போல, மாநகர் பேருந்​துகளில் டிக்​கெட் எடுப்​பவர்​களுக்​கும் இது பொருந்​தும்.

மின்​சார ரயி​லில் பயணிப்​பவர்​களும் இந்த சலுகையை பயன்​படுத்த முடி​யும். ஆனால், இந்த சலுகை ஒரு டிக்​கெட்​டுக்கு ஒரு முறை மட்​டும் தான் கிடைக்​கும். இந்த சலுகை நேற்று முதல்​ நடை​முறைக்​கு வந்​துள்​ளது.





Source link


Spread the love
  • Related Posts

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : கலைக்கல்லூரி மாணவிகள் சைக்கிள்  பேரணி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 11:49 PM IST இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள்  போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர் சைக்கிள் பேரணி கொடைக்கானல் ஏரிச்சாலை…


    Spread the love

    கரூர் அசம்பாவிதம்; விஜய்யிடம் சிபிஐ விசாரணை: கனிமொழி எம்.பி. கொடுத்த பதில் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 1:33 PM IST கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார். News18 அதிமுக பொதுச் செயலாளர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *