
உதகை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உதகை நகரில் பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி முதல் நீலகிரிக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து கடந்த மாதம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வார நாட்களில் 6,000 வாகனங்களும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 8,000 வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்குமாறு மேலும் ஒரு கட்டுப்பாட்டையும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விதித்தனர்.






