இலங்கை சுற்றுலாவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்: துணைத் தூதர் தகவல் | Deputy Ambassador says India continues to be the top destination for tourism in Sri Lanka

Spread the love


சென்னை: இலங்கை சுற்றுலாவில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளதாக இலங்கை துணைத்தூதர் கணேசநாதன் கீத்தீஸ்வரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கை சுற்றுலாத் துறை நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயைப் பதிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை 17 லட்சத்து 25,494 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அதில் இந்தியர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 75 ஆயிரத்து 292 ஆக உள்ளது. இலங்கைக்கு சுற்றுலா வரும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதற்கு இரு நாடுகள் இடையேயான ஆன்மிக, கலாச்சார, மத மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் முக்கியகாரணங்களாகும். மொத்த சுற்றுல ப் பயணிகளில் 22 சத வீதம் பேர் இந்தியாவிலிருந்தே வந்துள்ளனர்.

திரைப்பட படப்பிடிப்பு தொடர்பான சுற்றுலாவை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்களது அரசின் சார்பில் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு வழங்கப்பட்டுள்ளது. லங்கன் ஏர்லைன்ஸ் குறைந்த பயண நேரத்துடன் 9 இந்திய நகரங்களை இலங்கையுடன் இணைக் கும் வகையில் விமான சேவைகளை வழங்குகிறது. அதேபோன்று இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகியவை தென்னிந்தியாவின் பல நகரங் களிலிருந்து இலங்கைக்கு சிறந்த இணைப்பு வசதிகளை வழங்குகின்றன.

முதலீட்டாளர்களுக்கு வரவேற்பு: தென்னிந்தியாவிலிருந்து வணிகரீதியான உறவு வலுப்பட வேண்டும். இந்தியாவிலிருந்து மேலும் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா வர வேண்டும். அதேபோல், இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யவும் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், இந்திய சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்பின் தமிழகப் பிரிவு தலைவர் சி.கே.ராஜா, லங்கன் ஏர்லைன்ஸ் மண்டல மேலாளர் ஃபவுசான் பரீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





Source link


Spread the love
  • Related Posts

    பிசியோதெரபிக்கும் நீட் தேர்வு! உடனடியாக கைவிட பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்   | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      அக்கடிதத்தில், தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம், வரவிருக்கும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET)…


    Spread the love

    “தவறான செய்தியை வாசிக்கமாட்டேன் என்றே ஆளுநர் கூறியுள்ளார்” – எடப்பாடி பழனிசாமி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 20, 2026 12:44 PM IST தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, அரசு அறிக்கையை வாசிக்க மறுத்தது குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். News18 2026ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *