“இந்தி சினிமா தென்னிந்திய சினிமாவை காப்பி அடிக்கிறது” – பிரபல நடிகர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Spread the love


Last Updated:

“இந்தி சினிமா ஆரம்பத்திலிருந்தே பாடல்களையும் கதைகளையும் திருடி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் இருந்து அதிகம் காப்பி அடித்திருக்கிறோம்” என பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் குற்றம்சாட்டியுள்ளார். 

News18News18
News18

“இந்தி சினிமா ஆரம்பத்திலிருந்தே பாடல்களையும் கதைகளையும் திருடி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் இருந்து அதிகம் காப்பி அடித்திருக்கிறோம்” என பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழில் வெளியான ‘பேட்ட’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நவாசுதீன் சித்திக். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறுகையில், “இந்தி சினிமாவில், கதைகளுக்கான முக்கியத்துவமும் படைப்பாற்றலும் இல்லை.

அவை தென்னிந்திய திரைப்படங்களில் இருந்து நகலெடுக்கப்பட்ட கதைகளையே அதிகம் சார்ந்திருக்கின்றன. இந்தியில், கடந்த 5 வருடங்களாக ஒரே மாதிரியான கதைகள்தான் திரும்பத் திரும்ப எடுக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் மக்கள் சலிப்படைந்ததும் அதை விட்டுவிடுகிறார்கள்.

பாலிவுட்டில் பாதுகாப்பின்மையை பார்க்க முடிகிறது. ஒரே பார்முலா தான். அது வெற்றி பெற்றால் அதையே படமாக எடுக்க முயல்கின்றனர். அதன் 2, 3, 4-ம் பாகங்கள் என உருவாக்கப்படுகின்றன. இது நிதி திவால் போல, படைப்பு திவால் நிலை. படைப்புத் திறன் வறுமை என்றும் சொல்லலாம்.

இந்தி சினிமா ஆரம்பத்திலிருந்தே பாடல்களையும் கதைகளையும் திருடி வருகிறது. திருடுபவர்கள் எப்படி படைப்பாற்றல் கொண்டவர்களாக இருக்க முடியும்? தென்னிந்திய சினிமாவில் இருந்து அதிகம் காப்பி அடித்திருக்கிறோம். சில பிரபலமான படங்களில் இருந்தும் காப்பி அடித்துள்ளனர். இது மிகவும் இயல்பாகிவிட்டது” என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    “வாழ்நாள் முழுவதும் உன் அருகில் நான்…” – 10வது திருமண நாள்… அசினின் கணவர் நெகிழ்ச்சி! | பொழுதுபோக்கு செய்திகள்

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 8:40 PM IST மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு அசின் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் இருக்கிறார். News18…


    Spread the love

    Bigg Boss 9 Title Winner | பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் இவர் தான்.. வெளியான கணிப்பு! | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      தொடர்ந்து 6 பேர் ஃபினாலேவிற்கு தகுதி பெற்ற நிலையில் வினோத் ரூ.18 லட்சத்துடன் பெட்டியை எடுத்து வெளியேறினார். அதே போல், சாண்ட்ரா எவிக்‌ஷன் செய்யப்பட்டார். கடைசியாக சபரி, விக்கல்ஸ் விக்ரம், அரோரா, திவ்யா ஆகிய 4 பேரும்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *