அவுட் டேட்டட் முதலமைச்சர்.. – கடுமையாக விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன்

Spread the love


Last Updated:

தமிழிசை சௌந்தரராஜன் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த முயன்றார். காவல்துறை அனுமதி மறுத்ததால், பாஜக சாலை மறியலில் ஈடுபட்டது.

News18News18
News18

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கின்றது. அதனை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் இன்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொதுமக்களிடம் கையெழுத்து பெற திட்டமிட்டு இருந்தார். ஆனால், காவல்துறை அவர் பொதுமக்களிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற அனுமதி அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை சௌந்தரராஜன் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, காவல்துறையினர் தமிழிசை சௌந்தரராஜன் அனுமதிக்காததை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் காவல்துறையினர் தமிழிசை சௌந்தரராஜன் நிற்க வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இறுதியாக காவல்துறையினர் பொதுமக்கள் சிலரிடம் கையெழுத்து பெற அனுமதி அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பாமர மக்களுக்கும் சம கல்வி கிடைக்க வேண்டும் என்கிற தங்களின் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

அனைவருக்குமான வாய்ப்பை மறுக்கும் முதலமைச்சர் அப்டேட் ஆக இல்லாமல் அவுட்டேட்டாக இருப்பதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனத்தை முன் வைத்தார்.

சமஸ்கிருதத்தை திணிக்கவே ஹிந்தியை கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக முதலமைச்சரின் விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர், அது போன்று இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்ட நிலையிலும் அதனையே திமுக தொடர்ந்து கூறி வருவதாக கூறினார்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    ஊட்டி, கொடைக்கானலில் ஏப்.1 முதல் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு | New restrictions for tourist vehicles in Ooty and Kodaikanal from April 1

    Spread the love

    Spread the love      கோடை கால நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த கட்டுப்பாடுகளை வரும் ஏப்.1 முதல் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற…


    Spread the love

    தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல்

    Spread the love

    Spread the love      Last Updated:March 14, 2025 9:09 AM IST Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அது உயர்த்தப்படுமா, பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *