“அதிமுகவில் சர்ப்ரைஸ் நடக்கும்.. Wait and See” – சசிகலா பரபரப்பு | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் மதுரை புதூர் பகுதியில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

News18
News18

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் இன்று திடீரென முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஒன்றாக மரியாதை செலுத்தினர். மேலும், கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது டிடிவி தினகரன், “சசிகலா இங்கு வருவதற்காக கொஞ்சம் காலதாமதமாக கிளம்பினார். அதன் காரணமாக எங்களோடு இங்கு அவரால் பங்கேற்க முடியவில்லை. ஆனால், அவர் மனதார என்றைக்கும் எங்களோடு இருப்பார்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் மதுரை புதூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “அதிமுகவில் சர்ப்ரைஸாக அனைத்தும் நடக்கும். அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்படும். அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவேன் என்று சொல்கிறேன். அதனை பொறுத்திருந்து பாருங்கள் (Wait and See)” எனத் தெரிவித்தார்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை இதய ஸ்டென்ட்​டுக்கு உலகளா​விய அங்​கீ​காரம் கிடைத்​துள்​ளது | New generation heart stent made in India receives global approval

    Spread the love

    Spread the love      சான்​பி​ரான்​சிஸ்கோ: இதய சிகிச்சை நிபுணர்​களின் உலகளா​விய மாநாடு அமெரிக்​கா​வின் சான்​பி​ரான்​சிஸ்​கோ​வில் நேற்று முன்​தினம் முடிவடைந்​தது. இதில் டெல்லி பத்ரா மருத்​து​வ​மனை டீனும், இதய சிகிச்சை நிபுணரு​மான டாக்​டர் உபேந்​திர கவுல், டுக்​ஸ்​டோ-2 என்ற பெயரில் இந்தி​யா​வில் மேற்​கொள்​ளப்​பட்ட…


    Spread the love

    வங்கி கணக்கு நாமினேஷன் முதல் ஓய்வூதியம் வரை… நாளை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வரும் அதிரடி மாற்றங்கள்… | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      வங்கிகளில் டெபாசிட் கணக்குகள், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர்களை (Bank Account Nominations) நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கென…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *