அஜித் பட நடிகை மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு.. என்ன நடந்தது?

Spread the love


Last Updated:

பிரபல சின்னத்திரை நடிகை ஷர்மிளா தாபா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

நடிகை ஷர்மிளா தாபா நடிகை ஷர்மிளா தாபா
நடிகை ஷர்மிளா தாபா

பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக பிரபல சின்னத்திரை நடிகை ஷர்மிளா தாபா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பிரபலமானவர் ஷர்மிளா தாபா. அதன்பின் அந்த புகழை வைத்து விஸ்வாசம், வேதாளம், சகலகலா வல்லவன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த இவர், தனியார் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.  நேபாளத்தை சேர்ந்த இவர் நடன உதவி இயக்குனர் ரகு என்பவரை திருமணம் செய்துக் கொண்டு சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் மீது தற்போது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு அளித்த முகவரியில் முறைகேடு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த இவர், கடந்த 2011 முதல் 2021ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் அண்ணா நகர் முகவரியின் ஆவணங்களைக் கொடுத்து இந்தியன் பாஸ்போர்ட் பெற்று வைத்திருந்தார். அந்த பாஸ்போர்ட் தற்போது காலாவதியான நிலையில் மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஆட்டோவில் தனியாக பயணிப்பவர்கள் தான் ஸ்கெட்ச்… சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்… வெளியான அதிர்ச்சி பின்னணி!

தற்போது அவர் வியாசர்பாடியில் வசித்து வருவதால், தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வியாசர்பாடி முகவரியைக் கொடுத்திருக்கிறார். இதில் முறைகேடு இருப்பதாக கருதிய உள்துறை அமைச்சகம் பாஸ்போர்ட் மோசடி வழக்கை இவர் மீது அளித்துள்ளனர். அதனை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை தாபா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    ரஜினியின் ஜெராக்ஸ்… முதல் படம் ரிலீசாகும் முன் நடந்த துயரம்

    Spread the love

    Spread the love      அப்போது எக்காரணத்தை கொண்டும் ரஜினிகாந்தின் பிரதிபலிப்பை வெளிப்படுத்தக் கூடாது என்று படக்குழு ஸ்ட்ரிக்டாக கூறியிருக்கிறது. அப்படி இருந்து ரஜினியின் மேனரிஸத்தை மாஸ்டர் சுரேஷ் வெளிப்படுத்த அவரை கமல்ஹாசன் செல்லமாக திட்டிய சம்பவங்களும் நடந்துள்ளன. இப்படி, ‘கல்லுக்குள் ஈரம்’,…


    Spread the love

    OTT Spot: சூரியின் ‘மாமன்’ ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா? – வெளியான அறிவிப்பு

    Spread the love

    Spread the love      Last Updated:July 28, 2025 9:39 PM IST சூரி நடிப்பில் உருவான ‘மாமன்’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன் சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *