வங்கதேசத்தில் இந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேர் கைது | Hindu woman assaulted in Bangladesh

Spread the love


டாக்கா: வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு உரிய நீதி வழங்​க​வும், குற்​ற​வாளி​கள் மீது நேரடி​யாக நடவடிக்கை எடுக்​க​வும் வலி​யுறுத்தி டாக்கா பல்​கலைக்​கழக மாணவர்​கள் நேற்று மிகப்​பெரிய போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து குமிலா மாவட்ட காவல் துறை தலை​வர் நஸிர் அகமது கான் கூறிய​தாவது: குமிலா மாவட்​டம் முராட்​நகரில் நடை​பெறும் ஹரி சேவா திரு​விழாவை பார்ப்​ப​தற்​காக 21 வயது இந்​துப் பெண் அவரது பெற்​றோர் வீட்​டுக்கு குழந்​தை​யுடன் வந்​துள்​ளார். இவரது கணவர் துபா​யில் வேலை​பார்த்து வரு​கிறார்.

கடந்த ஜூன் 26-ம் தேதி ராம்​சந்​திரபூரைச் சேர்ந்த பெஸோர் அலி (36) என்​பவர் அந்த இந்​துப் பெண்​ணின் வீட்​டுக்​குள் அத்​து​மீறி நுழைந்​துள்​ளார். மேலும், அந்​தப் பெண்ணை கொடூர​மாக தாக்கி நிர்​வாணப்​படுத்​தி​யதுடன் பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். இதுதொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலான பின்பே இந்த சம்​பவம் வெளிச்​சத்​துக்கு வந்​தது.

இதையடுத்​து, உள்​ளூரைச் சேர்ந்த முக்​கிய அரசி​யல்​வா​தி​யான பெஸோர் அலியை போலீ​ஸார் கைது செய்​தனர். பாதிக்​கப்​பட்ட பெண்​ணின் அடை​யாளத்தை சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டதற்​காக மேலும் 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு நஸிர் அகமது கான் தெரி​வித்​தார்.

இதனிடையே பாதிக்​கப்​பட்ட சிறு​பான்மை இந்து பெண்​ணுக்கு நீதி வழங்க கோரி டாக்கா பல்​கலைக்​கழக மாணவர்​கள் மிகப்​பெரிய பேரணியை நடத்​தினர். இந்த சம்​பவத்​தில் தொடர்​புடைய அனை​வர் மீதும் நேரடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​பது போ​ராட்​டக்​காரர்​களின் கோரிக்​கை​யாக இருந்​தது.

நீதி​மன்​றம் உத்​தரவு: இந்து பெண்ணை நிர்​வாண​மாக்கி கொடூர​மாக சித்​ர​வதை செய்​யும் நபரிடம் அந்த பெண் தன்னை விட்​டு​விடும்​படி மன்​றாடும் வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது. இதையடுத்​து, அந்த பதிவை உடனடி​யாக நீக்க வங்​கதேச உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டது. அத்​துடன் பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு தேவை​யான பாது​காப்பு மற்​றும் மருத்​துவ உதவி​களை வழங்​க​வும்​ நீதி​மன்​றம்​ உத்​தர​விட்​டுள்​ளது.





Source link


Spread the love
  • Related Posts

    மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்

    Spread the love

    Spread the love      மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில்…


    Spread the love

    புயலுக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்த மீனவ பெண்கள்…! | ராமநாதபுரம்

    Spread the love

    Spread the love      Last Updated:December 03, 2025 1:00 PM IST டிட்வா புயலுக்கு பின் வானிலை சீராகி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் பாம்பனில் கருவாடு உற்பத்தி தொடங்கி கருவாடு காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் ஈடுபட்டு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *