ரஜினியின் ‘கூலி’ படத்தில் அறிவிக்கப்பட்ட சர்ப்ரைஸ் கேரக்டர்… மாஸ் லுக்கில் ஆமிர்கான்.. போஸ்டர் வெளியீடு

Spread the love


Last Updated:

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ படத்தில் ஆமிர்கான் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘தாஹா’ என்ற பெயரில் ஆமிர்கான் மாஸான லுக்கில் கையில் சிகார் வைத்துக்கொண்டு போஸ் தருகிறார்.

ஆமிர்கான்ஆமிர்கான்
ஆமிர்கான்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர்கான் கதாபாத்திர போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘கூலி’. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘சிக்கிட்டு’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் பாடலை அனிருத் பாடியிருந்தார். டி.ஆரின் குரலும் இடம்பெற்றிருந்தது. ’கூலி’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாயிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகின. இதில் சர்ப்ரைஸ் கதாபாத்திரம் ஒன்றை படக்குழு வெளியிடாமல் வைத்திருந்தது. அதாவது பாலிவுட் நடிகர் ஆமிர்கான் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் கசித்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது.

மேலும் ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் பேட்டிகளில் ஆமிர்கான் தான் ‘கூலி’ படத்தில் நடிக்கிறேன் என்பதை உறுதி செய்திருந்தார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வேறொரு படத்திலும் நடிக்க இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் ‘கூலி’ படத்தில் ஆமீர்கானின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘தாஹா’ என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ஆமிர்கான் நடிக்கிறார். பனியன் அணிந்துகொண்டு ப்ளாக் அண்ட் வொயிட் போஸ்டரில் கையில் சிகார் வைத்துக்கொண்டு மாஸான லுக்கில் போஸ் தருகிறார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.

[]

Source link


Spread the love
  • Related Posts

    KalamKaval OTT : மம்மூட்டியின் களம்காவல் ஓடிடி-யில் எப்போது ரிலீஸ்?

    Spread the love

    Spread the love      இந்த படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. [] Source link Spread the love     


    Spread the love

    Dileep | “மஞ்சு வாரியர் சொன்னதில் இருந்து…” – தீர்ப்புக்கு பின் நடிகர் திலீப் பேசியது என்ன? | பொழுதுபோக்கு

    Spread the love

    Spread the love      இதற்கிடையில், இந்த வழக்கில் நடிகர் திலீப்பை 8 ஆவது குற்றவாளியாக சேர்த்து சிறப்பு புலனாய்வுக் குழு புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 8 ஆண்டுகளாக நீடித்த வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் நிறைவு பெற்றது. இந்நிலையில்,…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *